Show all

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது! நாளை மறுநாள் அமுலுக்கு வருகிறது.

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

32,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32ஆக, அதாவது லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு ரூ.6 உயர்த்தப்படுகிறது.

அதேபோல், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் திங்கட் கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,247.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.