Show all

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா, தீயாக்கிய புகைப்படம்! பிக்பாஸ் பருவம் மூன்றில், தான் போட்டியாளர் போல

இன்னும் இரண்டு கிழமைகளில் கமல் தொகுக்கும் பிக்பாஸ் மூன்று, விஜய் தொலைக்காட்சியில் கலக்கவிருக்கும் நிலையில், விஜய் தொலைக்காட்சி  தொகுப்பாளினி பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பரபரப்பு கிளப்பியிருக்கிறார்.

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் இரண்டு பருவங்கள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது பருவம் இரண்டு கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

வழக்கம் போல நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கியிருந்து, பிக்பாஸ் சொல்லுகிற படி: 
பிரபலங்கள் ஒருவருக்கொருவர் சிண்டு முடிய வேண்டும். இவரை வெளியேற்றலாம், அவரை வெளியேற்றலாம் என்று பிரபலங்கள் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட வேண்டும். காட்டிக் கொடுக்க வேண்டும். போட்டுக் கொடுக்க வேண்டும். ஓவ்வொரு கிழமையும் பார்வையாளர்கள் அவரை வெளியே அனுப்ப வேண்டாம், இவரை வெளியே அனுப்ப வேண்டாம் என்று இயங்கலையில் வாக்கு அளிக்க வேண்டும். போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பார்கள் பிரபலங்கள். அதில் கடைசி வரை வீட்டிற்குள் இருப்பவரே வெற்றியாளராக கருதப்படுகிறார். போட்டிகள் நம்ம நடுவண் அரசின் நீட் தேர்வு மாதிரி ஒரே குளறுபடியாக இருக்கும். 

கடைசியாக இவர்தான் வெற்றியாளர் என்று பிக்பாஸ் சொல்லுகிறவரை, கமலுக்கு ஒடன்பாடு இருக்கிறதோ இல்லையே, இல்லாத பொல்லாத காரணங்களையெல்லாம் சொல்லி கடைசி நாள் இரவு பனிரெண்டு மணி வரை இழு இழு என்று இழுத்து,  ஒருவருக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன. 

இந்த பிக் பாஸ் தமிழ் மூன்றாவது பருவத்தில் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்று பல்வேறு செய்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின்  தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா, பிக் பாஸ் தமிழ் பருவம் 3ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகும் வகையாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பரபரப்பு கிளப்பியிருக்கிறார்.

அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் இருக்கையில் அவர் அமர்ந்திருப்பது போன்று காணப்படுகிறார். இதை வைத்தே பலவாறு யூகங்கள் உலா வருகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,177.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.