22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சில மாதங்களுக்கு முன்னால், சென்னை ஆலப்பாக்கத்தில் இருக்கிற தன்னுடைய வீட்டில், படபிடிப்பு நடத்துவதற்காக வந்த மகள் வனிதா, அதன் பிறகு அந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார் என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார் நடிகர் விஜயகுமார். இதைத் தொடர்ந்து, வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறையினர் அந்த வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். கடந்த சில கிழமைகளுக்கு முன்னால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்று, வனிதா உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு ஒன்றைத் பதிகை செய்தார். மனுவை விசாரித்த உச்ச அறங்கூற்றுமன்றம் வனிதாவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த நிலையில், நேற்று மறுபடியும், வனிதா ஆலப்பாக்கத்தில் இருக்கிற வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். வீடு தனது தாயின் பெயரில் இருப்பதாகவும் வீட்டில் தனக்கு உரிமையிருப்பதாகவும், வனிதா தெரிவிக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் விஜயகுமார், தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க. நான், வேற என்ன சொல்றது? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலே இதைப் பத்தி பேட்டியெல்லாம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லைங்க என்று வருத்தமாகச் சொன்னார். பாசத்தை துறந்து பணத்திற்காக இந்தக் குடும்பம் சந்திக்கு வந்து விட்டது. காவல்துறை, அறங்கூற்றுமன்றம், ஊடகங்கள் இதில் பயனடைகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,995.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.