Show all

மக்கள் மாறுபட்ட கோணத்திலேயே பார்க்கிறார்கள்! பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் தேர்வை மட்டும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் பிக்பாஸ் தலைப்பை வெல்வார்கள் என்ற யோசனையில் மக்கள் யாரும் இல்லவேயில்லை. மாறாக இவருக்கு பிக்பாஸ் தலைப்பு கொடுக்கப் படுமானால் அதற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறார்கள், இறுதி போட்டியாளர் நால்வருக்கும் நான்கு காரணங்களை. இதுவரை போட்டியாளர் ஒவ்வொருவரும் வெளியேற்றப் பட்ட காரணத்துக்குக் கூட தெளிவாகப் பட்டியல் வைத்திருக்கிறார்கள் மக்கள்.

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. எந்தப் போட்டி நிகழ்ச்சியிலும் போட்டியாளரின் தனித்திறமை சார்ந்தே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். பாட்டுப்போட்டி போன்ற சில நிகழ்ச்சிகளில், நடுவர்களாலேயே யார் உண்மையான வெற்றியாளர் என தீர்ப்பு வழங்க முடியாதவாறு சிலர் ஒளிர்வார்கள். அந்த நிலையில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வெற்றியாளரை முடிவு செய்கிறார்கள்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்களில் யாரை சிறந்தவராக தேர்ந்தெடுப்பது என்பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களுக்கோ, பிக்பாஸ் நிகழ்ச்சியை தெகுத்து வழங்குகிற கமலுக்கோ கூட ஒரு தெளிவான தீர்மானம் இல்லை என்பதைத்தான் கடந்த பிக்பாஸ் மூன்று பருவங்களும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

ஆகவே பிக்பாஸ் போட்டியாளர்களில் தனித்திறமை என்பதற்கான அளவுகோல் எதுவுமே இல்லாத நிலையில், இன்று இரவு யார் பிக்பாஸ் தலைப்பை வெல்லுவார்கள் என்று பிக்பாஸ் நிகழச்சிப் பார்வையாளர்கள் யாரும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாகவே காணோம். 

மாறக சிலர் லாஸ்லியாவிற்குத்தான் கொடுப்பார்கள் என்று சில காரணங்களை முன் வைத்துப் பேசுகிறார்கள். வேறு சிலர் முகனுக்குத்தான் கொடுப்பார்கள் ஏனென்றால் அவர்தான் இறுதி நிகழ்ச்சிக்கு செல்வதற்கான முதல் பொன்அனுமதி பெற்றிருக்கிறார் என்கின்றனர். இன்னும் சிலர் சாண்டிதான் விஜய் தொலைக்காட்சிக்கு பிடித்தவர் அவருக்குத்தான் பிக்பாஸ் தலைப்பைக் கொடுக்கும் என்கின்றனர். 

மற்றும் சிலர் செரின்தான் தமிழ்ப்பெண் இல்லை அவருக்கே பிக்பாசும், கமலும் வெற்றியைத் தூக்கி கொடுப்பார்கள். கடந்த பருவத்தில் கூட ஐசுவுக்கு வெற்றியைத் தூக்கிக் கொடுப்பதாகத்தானே பிக்பாஸ் கடைசிவரை காய் நகர்த்தி கொண்டிருந்தார். ஊடகங்கள் ஐசு மீதான குற்றப் பின்னனியை வெளிச்சம் போட்டுக் காட்டிய போதுதானே வேறு வழியில்லாமல் ரித்வீகாவிற்கு தலைப்பு கொடுத்தார்கள் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைப்பை வெல்லுகிறவரை அடையாளம் காட்டுவதற்கு பிக்பாஸ் என்னென்ன உபாயத்தை பின்பற்றுவார் என்று கணிப்பதிலேயே பார்வையாளர்கள் கருத்தாக இருக்கிறார்கள். 

மற்றபடி மக்கள் அளிக்கும் வாக்குகளையோ, இவர் திறமையாளர், இவர் நல்ல மனிதர், என்று யோசிக்கவே காணோம். பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் தேர்வை மட்டும் மக்கள் மாறுபட்ட கோணத்திலேயே பார்க்கிறார்கள்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,297.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.