Show all

தீயாகி வரும் காணெளி! பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிடம் கவின், லாஸ்லியா ஆகியோர் சண்டை போட்ட காணெளி

பிக்பாஸ் வீட்டில் தன்னிடம் கவின், லாஸ்லியா ஆகியோர் சண்டை போட்ட காணெளியை மதுமிதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் அடிப்படையை இழிவு படுத்துவதில், வக்கிரமாக செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் மிகையாகது என்றே கருத முடிகிறது. 

பிக்பாஸ் பருவம் ஒன்றில் ஜலி என்பவரை சல்லிக்கட்டு போராளி என்று பிரபலப் படுத்தி அவரின் அறியாமையை வைத்து சல்லிக் கட்டு போராட்டைத்தையே இழிவு படுத்துவது போல் நடந்து கொண்டது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழர் அடிப்படைக்கு எதிரான தன்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பிக்பாஸ் பருவம் மூன்றில் மதுமிதா அவர்களின் தமிழ் உணர்வுகள் அசிங்கப் படுத்தப் பட்டு, மதுமிதா அவர்களையும் அசிங்கப் படுத்தி, அவருக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் இழைத்த கொடுமையை முற்றாக மறைத்து, அவருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவதிலும் இழுபறி செய்து, காவல்துறையில் அவர் மீது புகார் அளித்து, தமிழர் அடிப்படைகளை இழிவு படுத்துவது போல் நடந்து கொண்டது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழர் அடிப்படைக்கு எதிரான தன்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிலையில், அவரும் தன்னால் இயன்ற வரை பிக்பாஸ் நிகழ்ச்சி- தனக்கும், தனது தமிழ் உணர்வுகளுக்கம், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருந்த அசிங்கம் பிடித்த நபர்களைக் கொண்டே இழைத்த அநியாயத்தை அப்படி இப்படி யென்று வெளிப்படுத்தி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் தன்னிடம் கவின், லாஸ்லியா ஆகியோர் சண்டை போட்ட காணெளியை மதுமிதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த பருவத்தில் தற்கொலை முயற்சிக்கு ஆளாகி வெளியேற்றப் பட்டவர் மதுமிதா. இவர் தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் நடந்த கேலி கிண்டல்கள் தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான காணொளியை மதுமிதா தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த வீட்டில் மதுமிதாவோடு போட்ட சண்டையை மறக்க முடியாது என லாஸ்லியா கூறுவதும், அவர் மற்றும் கவின் ஆகியோர் மதுமிதாவுடன் கடுமையாக வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அடங்கியுள்ளன.

இந்தக் காணொளியை வெளியிட்டு ‘8பேர் எப்படி பகிடிவதை பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்தக் காணொளி கொடை. இது முன்னோட்டம் மட்டுமே. முழுப்படம் காண்பிக்கப்படவில்லை. பார்த்தால், பார்ப்போர் கண்கள் கண்ணீர் குலமாய் மாறும்’ என மதுமிதா குறிப்பிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,296.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.