பிக்பாஸ் நிகழ்ச்சியில்
பங்கேற்றுள்ள காயத்ரி புறனி பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஜூலியிடம்
மல்லுக்கட்டிய அவர், தற்போது அவரை வைத்து ஓவியாவை ஓரங்கட்டி வருகிறார். பிக்பாஸ்
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் உண்மை முகங்கள் நாளுக்கு நாள்
மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காயத்ரி நடந்து கொள்ளும் விதம்
படுகேவலமாக உள்ளது. தொடக்கத்தில் ஆர்த்தியுடன் கைகோர்த்துக்கொண்டு
ஜூலியை உண்டு இல்லை என பார்த்தவர் காயத்ரி. ஓவியாவையும் சேரி பிஹேவியர் என கூறி சமூக
வலைதளங்களில் வறுபட்டவர். பிக்பாஸ் குடும்பத்தில் உள்ளவர்களை அவர்கள் இல்லாத
நேரத்தில் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார் காயத்ரி. குறிப்பாக ஓவியா பாத்திரத்தைத்
தரம்தாழ்த்தி விமர்சித்து வருவது அவர் மீதான எரிச்சலை கூட்டுகிறது. தனக்கு பிடித்த சாக்லேட் மில்க் ஷேக்கை சாப்பிட
தனக்கு கால்சியம் குறைவாக இருப்பதாக பொய் கூறி கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து
முதுகுக்குப்பின்னால் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காயத்ரி ரகுராம் தற்போது கட்டிப்பிடிக்கும்
புகழ் ஜூலியை கையில் போட்டுக்கொண்டு ஓவியாவை ஒதுக்க முயல்கிறார். காயத்ரிக்கு பக்கவாத்தியம் இசைத்;;து வரும் ஜூலியும்
ஓவியாவை கேவலமாக பேசி வருகிறார். ஓவியாவை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது, அவரை பிடிக்கவில்லை
என்கிறார் ஜூலி. நேற்றைய நிகழ்வில் ஓவியாவை வெளியேற்ற உன்னால்தான் முடியும், அவளை வச்சு
செய் என ஜூலியிடம் கூறுகிறார் காயத்ரி. கடந்த 2 கிழமைகளாக மக்களின் அதிக வாக்குகளைப்
பெற்று பிக்பாஸ் குடும்பத்தில் நீடித்து வரும் ஓவியா மீது ஜூலி, காயத்ரி, ரைசா மற்றும்
நமீதா உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது அவர்களின் சொற்களில் நன்கு
தெரிகிறது. விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஜூலியை
சல்லிக்கட்டு தலைப்பில் அறிமுகப்படுத்தி சல்லிக்கட்டை இழிவு படுத்தாமல் இருந்திருக்கலாம்.
பிக்பாஸ் என்பதை பெரியமுதலாளி என்று தமிழில் சொல்லியிருக்கலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.