Show all

மகளிர் உலக கோப்பை: இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இந்தியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் மழை காரணமாக 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் டாஸ் வென்று  இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த் இந்திய அணி 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 171 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்கட், கார்ட்னர், பீம்ஸ், விலானி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதன் பிறகு 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த வெற்றி மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்திய அணி லார்ட்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில்  இங்கிலாந்துடன் மோத இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.