Show all

நடிகை மாளவிகா மோகனன்! பேட்ட படத்தின் மூலம் தமிழ்த்திரைக்கு புதிய வரவு

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த பட்டம் போல படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 

பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய பிஹைன்ட் தி க்ளவுட்ஸ் படம் மூலம் வடக்கத்திய திரையுலகில் கால் பதித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

இதையடுத்து தற்போது ரஜினியின் பேட்ட படத்தில், பூங்கோடி எனும் கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

பிஹைன்ட் தி க்ளவுட்ஸ் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்னை பேட்ட படத்தில் நடிக்க அழைத்தார். இது ரஜினி படம் என முதலில் எனக்கு தெரியாது. தேர்வுகள் எல்லாம் முடித்த பிறகு தான், நான் பேட்ட படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது தெரியவந்தது. முதல் படமே ரஜினியுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. பிஹைன்ட் தி க்ளவுட்ஸ் படத்துக்கு பிறகு இப்படி ஒரு பிரபலத்தின் படம் அமையும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதுவும் ரஜினி படம் என்றால், எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். தமிழில் அறிமுகமாகும் முதல் படமே ரஜினி படமாக அமைந்தது எனது இயற்கைகொடை தான். 

நான் மலையாளி என்பதால் எனக்கு தமிழ் ஓரளவுக்கு புரியும். அதுவும் இல்லாமல், சிறு அகவையில் இருந்தே மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் படங்களைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன். எனவே தமிழ்ப் படங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று தான். 

இருந்தாலும் பேட்ட படத்தில் தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆசிரியரை நியமித்து தமிழ் கற்றுக்கொண்டேன். என் வசனங்களை முன்கூட்டியே வாங்கி மனப்பாடம் செய்து படப்பிடிப்பின் போது தமிழில் பேசி நடித்தேன். தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, எல்லா வசனத்தையும் ஒப்பிப்பேன். அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறேன். ரஜினி பாராட்டினார் நான் தமிழில் வசனம் பேசி நடித்ததை பார்த்து ரஜினி சார் வெகுவாக பாராட்டினார். அவரை போன்ற ஒரு எளிமையான மனிதரை பார்ப்பது மிகவும் கடினமான விசயம். எவ்வளவு பெரிய அதீத மின்மினியாக இருந்தாலும், எல்லோர் நடிப்பையும் உன்னிப்பாக கவனித்து பாராட்டுவார். அவரிடம் பாராட்டு பெற்றது மிகவும் மகிழ்ச்சியான விசயம். 

ரஜினி அவர்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் வாழ் நாள் ஆசை. எனது முதல் தமிழ் படத்திலேயே அது நிறைவேறிவிட்டது. அதுபோல் தனுசுடன் நடிக்க வேண்டும் என்பதும் என் ஆசை. விரைவில் அதுவும் நிறைவேறும் என நினைக்கிறேன். தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதேபோல் தமிழில் தொடர்ந்து நடிக்க உள்ளேன். பேட்ட மூலம் தமிழ்த் திரையுலகிற்கு புதிய வரவான நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.