Show all

அதிகமோ அதிகம்! பனிமழையில் பாடியாடி மகிழும் ஸ்ரேயா காணொளிக்கு - சமூக வலைதளத்தில் பார்வையும், பகிர்வும்

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது படங்கள் ஏதும் கைவசம் இல்லை போலும். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, திருமணம் செய்து சுற்றுலா சென்று பனிமழையில் பாடி ஆடும் காணொளிவை வெளியிட்டுள்ளார் சமூக வலைதளத்தில்.

இஷ்டம் தெலுங்கு படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா. 'எனக்கு 20 உனக்கு 18' மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரேயா சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான கடைசிப் படம் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. அரவிந்த்சாமிக்கு கதைத்தலைவியாக ஸ்ரேயா நடித்த 'நரகாசூரன்' படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. அண்மையில் உருசிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பனியில் பாடியாடும் காணொளி ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா.

அதில், மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற 'புது வெள்ளை மழை' பாடலை பாடுகிறார் ஸ்ரேயா. 'புது வெள்ளை மழை' பாடலில், பனிப் பிரதேசத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா இருவரும் இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியை நினைவுபடுத்தி, தற்போது அதை பாடியாடி உள்ளார் ஸ்ரேயா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,043.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.