Show all

டோலிவுட் ஹீரோக்கள் கோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க களம் இறங்குகின்றனர்

ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இது டோலிவுட் ஹீரோக்களின் கவனத்தை கோலிவுட் பக்கம் திருப்பி இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமாந்துடு படம் தமிழில் ‘செல்வந்தன்’ பெயரில் வெளியானது. தவிர சென்னைக்கு நேரடியாக வந்து அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தமிழில் பேசி அசத்தினார். இதையடுத்து ஜூனியர் என்டிஆர் தற்போது நடித்து வரும் புதிய படத்தை தமிழில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

சுகுமார் இயக்குகிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இதனை வேறுமொழிகளிலும் வெளியிட ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய ஸ்கிரிப்ட்டில் நடிப்பதுபற்றி ஜூனியர் என்டிஆர் பேசி வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளார். ஏற்கனவே விஜய், அஜீத், விஷால், சூர்யா, கார்த்தி போன்றவர்களின் படங்கள் தெலுங்கில் டப் ஆகி டோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்றி இருப்பதால் அதற்கு சவால்விடும் வகையில் டோலிவுட் ஹீரோக்கள் கோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க களம் இறங்குகின்றனர்.

தவிர திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதி ஹாசன் போன்றவர்கள் இரு மொழியிலும் நடிப்பதால் இருமொழி ஹீரோக்களுக்கும் ஹீரோயின்கள் பஞ்சம் இல்லை. அவர்களை தங்கள் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்வதில் போட்டி ஏற்பட்டுள்ளதால் நடிகைகளும் தங்கள் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.