Show all

அண்டத்தை செயல்படுத்தும் இறைவனை, நம் இதயத்தில் நிறுத்த முடியுமா?

அண்டத்தைச் செயல்படுத்தும் இறைவனை, நம் இதயத்தில் நிலைபடுத்த முடியுமா? என்று வேறு ஒரு களத்தில், என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடை அளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125:

அண்டம் என்பது 'வெளி' யில் அமைந்த நாள்மீன்கள், கோள்கள் ஆகிய பொருட்களை மட்டும் குறிக்கும்.

இவைகள் அனைத்தும் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்களின் வேறு வேறு எண்ணிக்கையிலான கூட்டு இயக்கங்கள் ஆகும்.

நீங்கள், நான், மரம், மட்டை ஆகிய வேறு வேறு கூட்டியக்கங்கள் ஆகிய அனைத்தும் 'வெளி' யில் தாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

நம் அனைத்திற்கும் கடந்தும், நாம் கூட்டியக்கம் என்பதால் நமக்கு உள்ளும், அமைந்தது 'வெளி' என்கிற காரணம் பற்றி வெளியைக் கடவுள் என்று நிறுவினர் தமிழ் முன்னோர்.

நிலம், நீர், தீ, காற்று ஆகிய இறைந்து கிடக்கும் நான்கு அற்றல்களை இறை என்று நிறுவினர் தமிழ்முன்னோர்.

'வெளி' யும் நாற்திரங்கள் ஆன இறையும் ஆற்றல் மூலங்கள். 

இந்த 'வெளி' யின், மற்றும் இறையின், கூறுகளாக அமைந்த அனைத்தையும் தெய்வம் என்கிற வழிபாட்டு மூலங்களாக நிறுவி வணங்கி வந்தனர் தமிழ் முன்னோர்.

இந்தத் தெய்வங்கள் பல.

இந்தத் தெய்வங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. நம்மால் உருவாக்கப்பட்ட அனைத்தும் கடவுள்கூறு தெய்வங்கள்
2. நம் உருவாக்கத்தில் பங்கு வகிக்கிற அனைத்து இறைக்கூறு தெய்வங்கள்
3. குல தெய்வங்கள்.

நம் உருவாக்கத்தில் பங்கு வகிக்கிற இறைக்கூறு தெய்வங்கள் மாயோன், வருணன், வேந்தன், கொற்றவை அகிய நான்கில் எந்த ஒன்றையும் இறைவன் என்று சொல்லலாம்.

உங்கள் வினாவிற்கு வருவோம்.
எந்த இறைவனும் அண்டத்தின் ஒரு பிண்டமே அன்றி, அண்டத்தை செயல்படுத்துவது அல்ல, என்பதை தமிழ்முன்னோர் நிறுவியுள்ள மேற்கண்ட விளக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

அண்டத்தின் பகுதிகளான அனைத்துக்கும் தான்தோன்றி இயக்கம் உண்டு.

அண்டத்தின் பகுதிகள் அன, நீங்கள் நான் மரம் மட்;டை உள்ளிட்ட அனைத்தும், தான்தோன்றி இயக்கமும், எல்லையும் இல்லாத 'வெளி' யில் தொடர்ந்து இயங்குவதால், 'வெளி' இயக்கம் பெற்று விண்வெளி ஆகிறது. 

நம்மால் இயக்கம் பெற்ற விண்வெளி, இயக்கமில்லா நிலையை அடைய வேண்டியதால், இயக்கம் கொடுத்த நம் அனைவரையும் தனித் தனியாக முயக்குகிறது.

ஒவ்வொருவரையும் இயக்கும், அந்த ஒவ்வொருக்குமான வெளி அல்லது கடவுள், விசும்பு ஆகும்.

நிலம், நீர், தீ, காற்று, விசும்பு அனைத்தையும் ஐந்திரம் என்று நிறுவனர் தமிழ்முன்னோர். 

அந்த ஐந்திரம் என்கிற தலைப்பை- இத்தனை விளக்கங்களையும் அறிய முடியாமலும், அறிய முயலாமலும், கற்பனையான பல செய்திகளோடு, பிரபஞ்சம் என்று மொழபெயர்த்து கொண்டனர் சமஸகிருத மொழியாளர்கள்.

பிர என்றால் பெரிய, பஞ்சம் என்றால் ஐந்து.

மீண்டும் உங்கள் வினாவிற்கு வருவோம்.
இறைவன் எனப்படுகிற மயோன், வருணன், வேந்தன், கொற்றவை ஆகிய நான்கில் கொற்றவை பெண்பால்.

மற்ற மாயேன், வருணன், வேந்தன் ஆகிய மூன்றில் ஏதோ ஒரு இறைவனை நம் இதயத்தில் நிறுத்த முடியுமா என்றால், முடியும் என்பது விடை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.