Show all

நடப்பு நாவலந்தேய நாடாளுமன்றத் தேர்தலில், யாருக்கு வாக்களிப்பது தமிழ்நாட்டுக்கும் ஒன்றியத்திற்கும் நல்லது

நடப்பு நாவலந்தேய நாடாளுமன்றத் தேர்தலில், யாருக்கு வாக்களிப்பது தமிழ்நாட்டுக்கும் ஒன்றியத்திற்கும் நல்லது என்று பதிவாகிற ஆக்கப்பாடான பொருள் பொதிந்த கருத்துக்களை அலசியதில் நமக்குக் கிடைத்த தரவே இந்தக் கட்டுரை.

31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125:

தமிழ்நாட்டுக்குத், தமிழ் அடிப்படைகளைக் கொண்டாடும் கட்சி காலத்தின் தேவையாக உள்ளது.

அதற்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே தேர்ச்சி (45) மதிப்பெண் பெறுகிறது. நாம் தமிழர் கட்சி, மேலும் கூடுதல் மதிப்பெண் பெறவும், திமுக திராவிட மாடல் முழக்கத்தில் இருந்து விடுபட நெருக்குதல் தரவும்,  நாம்தமிழர்கட்சி எதிர்கட்சியாக அமைய வேண்டும். 

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டியது, நாவலந்தேயத்தின் நலமான எதிர்காலத்திற்கானது.

காங்கிரசைவிட பேரளவான பார்ப்பனியப் பேரின, ஆதிக்க அடாவடி முன்னெடுக்கும் ஆற்றல் மிக்க கட்சியாக பாஜக உலா வருகிறது. நேற்றைய பார்ப்பனியப் பேரினவாத கட்சிதான் காங்கிரஸ். அதனால், பாஜகவிற்கு, காங்கிரஸ் மாற்று ஆகாது.

ஒன்றியத்தில் மாநிலக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி தேவை. நாவலந்தேயத்தில் அதை முன்னெடுக்கிற தகுதி உள்ள கட்சியாக திமுகவே திகழ்கிறது.

அந்த வகைக்கு நடப்பு நாவலந்தேயப் பாராளுமன்றத் தேர்தலில், திமுக நிற்கும் தொகுதிகளில் திமுகவிற்கும், திமுக நிற்காத தொகுதிகளில் நாம்தமிழர் கட்சிக்கும் தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் இது தமிழ்நாட்டிற்கும், ஒன்றியத்திற்கும் எதிர்காலத்தை உருவாக்கித்தர பயன்படும்

இதையெல்லாம் தாண்டி வாக்கு இயந்திர மோசடி மூலம் பாஜகவே மீண்டும் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றலாம் என்கிற ஒரு ஐயம் பேரளவாக சமூக ஆர்வலர்களின் பேசுபொருளாக இருந்து வருகிறது. அப்படியான நிலை வருமானால், நாவலந்தேயப் பணத்தின் மதிப்பு இலங்கையைப் போல சீரழிவது உறுதி என்றும் பேசப்படுகிறது.

வெளிநாடுகளில் பணிபுரிகிறவர்கள், அமெரிக்க டாலரைக் கையிருப்பு வைத்திருப்பவர்கள், மிக மிகக் கொஞ்சமான அமெரிக்க டாலர் வருமானத்திற்கு இயங்கலையில் ஈடுபடுகிறவர்கள், கொஞ்சம் பாதுகாப்புப் பகுதிக்கு வருவார்கள். மற்றவர்கள் பாடு சிரமமாக இருக்கும் என்று, தமிழ் ஆhவலர்களும், பொருளாதார அறிஞர்களும் சமூக ஊடகங்களில் பேரளவாகக் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.