கேரள விமான விபத்துச் சோகம் குறித்து வெளியிட்டுள்ள கீச்சுப்பதிவில் பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். 24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பாக்கிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை முன்னிட்டு சொந்த மண்ணிற்கு திரும்பிய பயணிகள் துபாயில் இருந்து, கேரளாவிற்கு ஏர் இந்தியா விரைவு போயிங் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாயினர். இந்த விமான விபத்து குறித்து பாக்கிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான் கான் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கேரளா மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுப்பார்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.