Show all

ஒன்பது குழி சம்பத் என்பது படத்தின் பெயராம்! விடுதலை நாளில், இயங்கலை திரையரங்கில் வெளியாகிறது

தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் ரீகல் டாக்கீஸ் என்ற செயலியை உருவாக்கி, அதை ஒரு இயங்கலை திரையரங்காக மாற்றி இருக்கிறார்.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பொன்மகள் வந்தாள், பெண்குயின், காக்டெயில் ஆகிய படங்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக எண்ணிம தளத்தில் வெளியாகின. ஆனால் சற்று மாறுபட்டு அப்புக்குட்டியின் திரைப்படம் ஒன்று இயங்கலை திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பல படங்கள் எண்ணிம தளத்தில் வெளியாகி வருகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், யோகிபாபுவின் காக்டெயில், வரலட்சுயின் டேனி ஆகிய படங்கள் எண்ணிம தளத்தில் வெளியாகின. தற்போது அப்புக்குட்டி நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் திரைப்படமும் வெளியிடத் தயாராகி இருக்கிற நிலையில், இயங்கலை திரையரங்கு என்கிற புதிய முறையை கொண்டுவருகின்றார்கள்.

இதுகுறித்து அப்புக்குட்டி கூறும்போது, நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற திரைப்படம் விடுதலை நாளில் அதுவும் இயங்கலை திரையரங்கில் வெளிவர இருக்கிறது. ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம், 80-20 பிக்சர்ஸின் திருநாவுக்கரசு தயாரிப்பில், சரவண சுப்பையாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜா.ரகுபதி இயக்கத்தில், நான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இத்திரைப்படத்தில் கதைத்தலைவனாக பாலாஜி அறிமுகமாகிறார். சசிகுமாரின் ‘கிடாரி’, கார்த்தியின் ‘தம்பி’ படத்தின் நாயகியான நிகிலா இப்படத்தில் கதைத்தலைவியாக நடித்திருக்கிறார். சூர்யா நடித்த ‘காதலே நிம்மதி’ படத்தின் இயக்குநர் இந்திரன், இதுவரை யாரும் பார்த்திராத வேடத்தில் வருகிறார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் ரீகல் டாக்கீஸ் என்ற செயலியை உருவாக்கி, அதை ஒரு இயங்கலை திரையரங்காக மாற்றி இருக்கிறார்.

இந்த இயங்கலை திரையரங்கில் கிழமைக்கு ஒரு புதுப்படம் வெளியாகும். அப்படம் வெளிவரும் சமயத்தில், இயங்கலையில் அனுமதிச்சீட்டு வாங்கி, உங்கள் வீட்டிலேயே அமர்ந்து, ஒரு அனுதிச்சீட்டில் குடும்பத்தினர் அனைவரும் கண்டு மகிழலாம். இதுதான் இயங்கலை திரையரங்கம் என்கிறார்கள்.

இந்திய விடுதலை நாள் அன்று காலை 9 மணிக்கு ரீகல் டாக்கிஸ் இயங்கலை திரையரங்கில் எங்களின் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம் வெளியாகிறது. இயங்கலையில் அனுமதி சீட்டு வாங்கி படத்தைப் பாருங்க. நீங்கள் தரும் ஆதரவால், எங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் வாழ்வு வளம் பெறும். தமிழ் திரை தொடர்ந்து வளரும்’ என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.