வங்க தேசத்தின் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 அகவையில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறி- வங்கதேச விடுதலையில் இந்தியாவுடன்- தானுந்தான் என்கிற நினைவலைகளை மீட்டினார். 14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: வங்க தேசத்தின் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 அகவையில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறி- வங்கதேச விடுதலையில் இந்தியாவுடன்- தானுந்தான் என்கிற நினைவலைகளை மீட்டினார். கொரோனா நுண்நச்சுப் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத மோடி, 15 மாதங்களுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார். இந்தியாவின் புதிய போயிங் 777 விமானத்தில் தலைமைஅமைச்சர் மோடி டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கினார். வங்கதேசத்தின் 50-வது ஆண்டு விடுதலைநாள் விழாவுக்காக டாக்கா வந்த தலைமைஅமைச்சர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்கதேசத்தின் தலைமைஅமைச்சர் ஷேக் ஹசினா, விமான நிலையத்துக்கு வந்திருந்து மோடிக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார். தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியும், வங்க தேச தலைமைஅமைச்சர் ஷேக் ஹசினாவும் இருநாடுக்கு இடையேயான உறவுகள் குறித்து பேசினார்கள். அதைத்தொடரந்து வங்க தேசத்தின் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய தலைமைஅமைச்சர் மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக அந்தநாட்டு உடன் பிறப்புகளுடன் நின்ற இந்தியப் போர்த்துறையின் துணிச்சலான வீரர்களுக்கு இன்று நான் மரியாதை செலுத்துகிறேன். வங்கதேசத்திற்கான விடுதலைப் போரில் பல இந்திய வீரர்கள் கலந்து கொண்டதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இன்று வங்கதேசத்தில், தங்கள் விடுதலைக்காக போராடியவர்களின் குருதியும், இந்திய வீரர்களின் குருதியும் ஒன்றாகப் பாய்கின்றன. இந்த குருதி ஒன்றுபட்ட உறவை உருவாக்கும், அது எந்த வகையான அழுத்தத்தின் கீழும் முறிந்துவிடாது. எந்தவிதமான அரசதந்திரத்திற்கும் இருநாடுகளுக்கு இடையேயான உறவு இரையாகாது. இந்தியாவிற்கும் வங்கதேத்திற்கும் இடையில் 50 ஆண்டுகாலமாக நட்பு உறவு தொடர்கிறது. வங்கதேசத்தின் 50 தொழில்முனைவோரை இந்தியாவுக்குச் வந்து எங்களின் சிறப்பான தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் அழைக்க விரும்புகிறேன். பாகிஸ்தான் போர்த்துறை இங்குள்ள மக்கள் மீது செய்த கொடுமைகளின் படங்கள் எங்களை திசை திருப்ப பயன்படுத்தின. பல நாட்களாக அந்தப் படங்கள் எங்களை தூங்க விடவில்லை. வங்கதேசத்தில் உள்ள உடன்பிறப்புகளுக்கு வாழ்வில் நடந்த ஒரு சோகநிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். வங்கதேசத்தன் விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டேன். இது எனது வாழ்க்கையின் தொடக்கக் கட்ட போராட்டங்களில் ஒன்றாகும். நானும் எனது நண்பர்களும் வங்கதேசத்தின் விடுதலைக்காக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டோம். அப்போது எனக்கு 20-22 அகவை இருக்கும். இவ்வாறு தலைமைஅமைச்சர் மோடி கூறினார். இந்தியாவின் வடபுல வங்காள மக்களோடு இவ்வளவு நினைவுகளைச் சுமக்கும் நமது தலைமை அமைச்சர் மோடிக்கு இந்தியாவின் தென்புல மக்களான தமிழர்தம் குருதித் தொடர்பினரான ஈழத்தமிழர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லாமல் போனது சிலநாட்களுக்கு முன்பான ஒரு நிகழ்வில். இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை இடம் பெறச்செய்ய முயலவில்லை ஒன்றிய பாஜக அரசு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.