Show all

இராஜபக்சே கட்சிக்கு முதன்மை! அதில் ஆறு விழுக்காடு இடங்கள் தமிழர்கட்சிகள் பெறும்வகையாக வாக்கு எண்ணிக்கை நிலவரம்

இன்று காலை 7 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பாடாக வெளியிடப்படவுள்ளன.

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் 196 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. ஒருசில இடங்களில் சிறிய அளவிலான வன்முறைகள் நிகழ்ந்தன. மாலை 5 மணிவரை மொத்தம் 71விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. 

இன்று காலை 7 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பாடாக வெளியிடப்படவுள்ளன.

இன்று காலையில் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணணிக்கை தொடங்கியது முதலே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகலிலும் இதே நிலை நிலவியது.

இன்று இரவு 10 மணி வரையிலான தேர்தல் முடிவுகளின் நிலவரப்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுன 41 லட்சத்து 5 ஆயிரத்து 602 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி 16 லட்சத்து 68 ஆயிரத்து 467 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திலும், தேசிய மக்கள் சக்தி 2 லட்சத்து 76 ஆயிரத்து 328 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அத்துடன், இலங்கை தமிழரசு கட்சி 2 லட்சத்து 43 ஆயிரத்து 267 வாக்குகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 489 வாக்குகளை இதுவரை பெற்று மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தேர்தல் முறை என்பது கட்சிகளுக்கு வாக்கு அளிக்கும் விழுக்;காட்டு அடிப்படை தேர்தல் முறையாகும். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி முதன்மை நிலையில் இருக்கும் இராஜபக்சேவின் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன 41 லட்சத்து 5 ஆயிரத்து 602 வாக்குகளை பெற்றுள்ள நிலையில்- தமிழ்மக்கள் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி அந்த வாக்குகளில் ஆறு விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளதால்-இராஜபக்சேவின் கட்சிக்கு நூறு தொகுதிகள் கிடைத்தால் தமிழரசு கட்சிக்கு ஆறு தொகுதிகள் கிடைக்கும். வேறு சில தமிழர் கட்சிகளுக்கும் சிற்சில தொகுதிகள் கிடைக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.