நியூசிலாந்து நாட்டின் தலைமைஅமைச்சர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 அகவை சிறுமி, அண்மையில் அனுப்பிய கடிதமும், சிறு அன்பளிப்பும் இணையத்தில் தீயாகி வருகிறது. 01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தான் 'டிராகன்'களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் 'டிராகன்' குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் விக்டோரியா என்கிற 8 அகவை சிறுமி நியூசிலாந்து நாட்டின் தலைமைஅமைச்சர் ஜெசிந்தாவுக்கு, கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அன்பளிப்பாகவோ, தன் பங்களிப்பாகவோ அனுப்பியிருந்தார் அந்தச் சிறுமி விக்டோரியா. இந்த கடிதத்தை புறக்கணிக்காமல், தலைமைஅமைச்சர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அந்தச் சிறுமிக்கு பதில் அனுப்பினார். அதில் அவர், 'டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் வாய்ப்பின்மையாக, அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை' என தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,153.
மேலும், அதனால் நீங்கள் அளித்த அன்பளிப்பு அல்லது பங்களிப்பை என்னால் ஏற்று கொள்ளமுடியாது. அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்'
என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டு இருந்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.