Show all

வங்காளதேசப் படைகளும் பங்கேற்கவுள்ளன! நாளை மறுநாள் இந்தியக் குடியரசு நாள் போர்த்துறை அணிவகுப்பில்

குடியரசு நாள்விழா அணிவகுப்பில் பங்கேற்பதில் மூன்றாவது நாடாக வங்காளதேச படைகள் இந்த ஆண்டு பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளன.

11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியக் குடியரசு நாள்விழா போர்த்துறை அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது.

இந்திய குடியரசு நாளையொட்டி நாளை மறுநாள் டெல்லியில் பேரளவான விழா நடைபெறுகிறது. இதில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்தப் போர்த்துறை அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது. வங்காளதேசம் விடுதலை பெற்ற 50-வது ஆண்டு நிறைவையொட்டி இந்த அணிவகுப்பில் அந்த நாடும் கலந்து கொள்கிறது.

அந்த நாட்டின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் அடங்கிய குழுவினர், இந்த ஆண்டு அணிவகுப்பில் முதலில் செல்வார்கள். இந்த அணிவகுப்பில் வங்காளதேச போர்த்துறை இசைக்குழுவினரும் பங்கேற்பார்கள்.

இந்தியக் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் 3-வது வெளிநாட்டு போர்த்துறை வங்காளதேசத்தினுடையது ஆகும். ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு பிரான்சும், நான்காண்டுகளுக்கு முன்பு அமீரகமும் இந்தியக் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.