பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை நடப்பு காலண்டுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை நடப்பு காலண்டுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்புக்கு பிறகு, ஊதா வண்ணத்தில், புதியவகை 100 ரூபாய்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ரூபாய்தான் தற்போது சுற்றி வருகிறது. எனவே, பழைய வகை ரூபாய்தாள்களை புழக்கத்திலிருந்து அகற்ற, கட்டுப்பாட்டு வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை செல்லாது என்று மகேஷ் அறிவிக்கவில்லை. அவற்றை திரும்பப் பெறும் நடவடிக்கையில் கட்டுப்பாட்டு வங்கி ஈடுபடக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.