Show all

எச்.இராஜாவின் புளுகு மூட்டை! தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது ஹிந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி

எங்கள் முன்னோருக்கு கொஞ்சமும் நான் சளைத்தவன் இல்லை என்று எச்;.இராஜவும் தமிழகத்தில் பல புளுகுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டுதாம் இருக்கிறார். அந்த வகையாக நேற்று கீச்சுவில் புளுகி வைத்த கதைதான்: திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது ஹிந்தி உரையை கனிமொழி தமிழில் மொழிபெயர்த்த கதை.

27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ‘கனிமொழி அவர்களின் கீச்சு ஒரு பொய் மொழி. ஏனெனில் திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது ஹிந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள். எனவே அவருக்கு ஹிந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் நிகழ்வே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு’ இது ஹெச். ராஜா கீச்சுவில் அவிழ்த்து விட்டுள்ள புளுகு மூட்டை.
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு துக்கடாவாம்
துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம்
வைக்கோல எடுத்து மாட்டுக்குப் போட்டா
மாடு பால் கொடுத்ததாம்
பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா
கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்
தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா
கல் எல்லாம் பாம்பாம்
பாம்ப அடிக்கத் தடியத் தேடினா
தடி எல்லாம் சேறாம்
சேறு கழுவ ஆத்துக்குப் போனா
ஆறெல்லாம் மீனாம்
மீனப் புடிக்க வலைக்குப் போனா
வலை எல்லாம் ஓட்டையாம்
ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா
ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியர்கள் இப்படி தொட்டதற்கெல்லாம் கதையும் காரணமும் கட்டுவார்கள். அனைத்தும் புளுகுகளின் உச்சமாகவேயிருக்கும். பல நேரங்களில் அவர்களின் கதைகள் ஆபாசத்தின் உச்சத்தைத் தொடும். சிவலிங்கம் கதை, இராமன் பிறப்புக்கதை, 60 ஆண்டுகளின் பெயர்க் காரணக் கதை, பாற்கடலில் அமுதம் கடைந்த கதை, இராகு கேது நிலாவை, ஆதிபகவனை விழுங்கிய கதை, பாஞ்சாலிக்கு பாண்டவர்கதை, குந்திக்கு கர்ணன் பிறந்த கதை இப்படி அவர்கள் கட்டிச் சென்ற கதைகளை இரவு பகலாக சொல்லிக் கொண்டேயிருக்கலாம். 

எங்கள் முன்னோருக்கு கொஞ்சமும் நான் சளைத்தவன் இல்லை என்று எச்;.இராஜவும் தமிழகத்தில் பல புளுகுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டுதாம் இருக்கிறார். அந்த வகையாக நேற்று கீச்சுவில் புளுகி வைத்த கதைதான்: திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது ஹிந்தி உரையை கனிமொழி தமிழில் மொழிபெயர்த்த கதை.

மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியிடம், ‘தும் பாரதியாங் ஹைங்’ என சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த பெண் காவலர் கேள்வி எழுப்பிய நிகழ்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளர்ந்து வருவதை நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்று நம்பி இப்படியொரு புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார் எச்.இராஜா. 

இந்த நிலையில், ஹெச். ராஜா குறிப்பிட்டது போல, 1989-ஆவது ஆண்டில் சென்னையில் நடந்த கடற்கரை தேசிய முன்னணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய துணை தலைமைஅமைச்சர் தேவி லாலின் உரையை தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு கனிமொழி பெயர்த்தார் என்பது எச்.இராஜா கட்டிய புளுகு மூட்டையே என்று உலக அளவில் பல்வேறு ஊடகங்கள் நிறுவி வருகின்றன.

1989-ஆம் ஆண்டில் கனிமொழி, அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அருகே அமர்ந்தவாறு தேவிலாலின் உரையை மொழி பெயர்த்ததாக கூறப்படும் நிகழ்வுக்கு சப்பைக்; கட்டும் வகைக்கு முன்மொழியும் நிழற்படங்கள் அனைத்தும், தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமாரின் வீட்டில், அவரை திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழியுடன் சந்தித்தபோது எடுத்தவை என்று தெரிவிக்கப்படுகிறது. 

நடிகர் சிவகுமாரின் விளக்கம்: கலைஞர் கதை வசனம் எழுதிய பல படங்களில் ஒன்றான, பாடாத தேனீக்கள் படத்தில் 1988-89 ஆண்டுகளில் நான் நடித்திருந்தேன். அப்போது அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமைந்தது. 
ஒரு நாள் எனது ஓவியங்களை வீட்டில் வந்து பார்க்க கனிமொழி விரும்பினார். பிறகு அவற்றை பார்க்க எனது தந்தையும் வரலாமா? என கனிமொழி கேட்டார். அதன்படியே, அடுத்த இரு நாட்களில் தனது குடும்பத்தாருடன் கலைஞர் எனது வீட்டுக்கு வந்து எனது ஓவியங்களை பார்வையிட்டார்.
அப்போது கலைஞர் ஒரு நடிகனின் ஓவியம் என்றால் ஏதோ பூசணிக்காயோ பொம்மையோ போட்டிருப்பார் என நினைத்தேன். என்ன இப்படி அருமையாக படைப்புகளை தீட்டியிருக்கிறீர்களே என்று கேட்டார்.

மேலும், எதற்காக நடிக்க வந்தாய்? என கலைஞர் கேட்டபோது, உங்களைப் போன்ற பேரறிமுகங்கள் பார்க்க வருவார்களே என்று பதில் அளித்தேன்.
பிறகு, அனைத்து ஓவியங்களைப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகலாம் என கலைஞர் கேட்டபோது, இன்னும் ஒரு மணி நேரம் தேவைப்படும் என்று கூறினேன்.
அப்போதுதான் கலைஞர், இன்னும் சில மணி நேரத்தில் வி.பி. சிங்கின் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்கச் செல்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் கனிமொழியும் ஓவியங்களை தீட்டுவதில் ஆர்வம் உடையவர் என்பதால் அவரிடம், ஓவியங்களை இருந்து பார்த்து விட்டு வருகிறாயா? என கலைஞர் கேட்டபோது, இல்லை அப்பா, நானும் வருகிறேன் என கூறினார்.
இப்படித்தான் அன்றைய நாளில் அவர்கள் எனது வீட்டுக்கு வந்து ஓவியங்களை பார்த்து விட்டு வி.பி. சிங் கூட்டத்துக்குச் சென்றார்கள் என்று சிவகுமார் 1989-ஆவது ஆண்டில் நடந்த, அந்த குறிப்பிட்ட நாளின் ஒன்றரை மணி நேர நிகழ்வை நினைவுகூர்ந்தார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.