இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி அளிப்பது மற்றும் குடியேற்ற விவகாரம் தொடர்பான விசயங்களில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தியர்கள் எளிதாக பிரிட்டன் வந்து செல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டனின் பாராளுமன்றத் தேர்வுக்குழு அறிக்கை அளித்துள்ளது. 10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பாராளுமன்றத் தேர்வுக் குழு இந்தியாவுடனான வர்த்தக மற்றும் அரசியல் உறவு தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் பதிகை செய்துள்ளது. இந்தியாவுடன் நாம் வர்த்தக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நெருங்கிய நட்பு நாடாக இருந்தோம். ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவுடனான நம் உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான நம் உறவு மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கியுள்ளது. வெளியுறவு கொள்கை தொடர்பான விசயங்களை மறு ஆய்வு செய்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். என பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் அதிகமாக வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் நம் நாடு இரண்டாவது இடத்தில் இருந்த நாம், தற்போது 17வது இடத்துக்கு பின் தங்கி விட்டோம். அதேநேரத்தில் மற்ற நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவு வைத்துள்ளன. பிரக்சிட் விவகாரத்துக்கு பின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட குளறுபடி இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்திய சுற்றுலா பயணியர், மாணவர்கள், தொழில் நிபுணர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கான நுழைவு அனுமதி அளிப்பது மற்றும் குடியேற்ற கொள்கையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன் இதை தளர்த்த வேண்டும். இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி அளிப்பது மற்றும் குடியேற்ற விவகாரம் தொடர்பான விசயங்களில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தியர்கள் எளிதாக பிரிட்டன் வந்து செல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,194.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



