Show all

பிரேசில் அமெரிக்காவை முந்தியது இந்தியா! நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பில்

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில், நேற்று ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தி இந்தியா முதலிடத்தை அடைந்தது.

32,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோர்களின் எண்ணிக்கை 7.67 லட்சமாகும்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 53, 523 ஆகும். அமெரிக்காவில் 55 லட்சம் பேர்களுக்குக் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனாவிலிருந்து 1.4 கோடி பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 38,937 பேர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை பிரேசிலில் 33 லட்சம் பேர்கள் சிகிச்சையில் உள்ளார்கள்;. இங்கு இதுவரை 1.72 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

உலகளவில் நேற்று ஒரே நாளில் கொரோனா அதிகம் பாதித்தோர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 63,986 பேர்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பு அடிப்படையில்- பிரேசில் மற்றும் அமெரிக்காவை முந்தி இந்தியா முதலிடத்தை அடைந்துள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.