தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். கீர்த்தி சுரேசும் இருக்கிறார். 32,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியைத் தந்தது. இப்படத்தின் மூலம் தமிழ்க் கொண்டாடிகளின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே. ஆகிய படங்களைக் கொடுத்து தனக்கென தனி கொண்டாடிகள் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன். இந்நிலையில் நடிகராக களமிறங்கியுள்ளார் செல்வராகவன். இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் கதைத்தலைவனாக நடித்துள்ளார். இப்படத்தில் பேரறிமுக நடிகை கீர்த்தி சுரேசும் முதன்மைக் கதாபாத்திராத்தில் நடிக்கிறார். நேற்று இப்படத்தின் முதல்பார்வை சுவரொட்டியைப் படக்குழு வெளியிட்டது. ‘சாணிக் காயிதம்’ படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே ‘ராக்கி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படமும் விரைவில் வெளிவரவுள்ளதாகத் தெரிய வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.