Show all

செங்கோட்டையில் விடுதலை நாள் கொண்டாட்டம்! மக்களின் கவனமீர்த்தது: தானுலங்கி செயலழிப்பு கருவி


இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தேசியக் கொடியேற்றிய விழாவிற்கு அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி செங்கோட்டையில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தேசியக் கொடியேற்றிய விழாவிற்கு அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் கூட்டத்திற்கு இந்தியாவில் முதன் முறையாக தானுலங்கிகளை (டிரேன்) செயலிழக்கச் செய்யும் மாபெரும் கருவி பயன்படுத்தப் பட்டது.

விழாவில் மிகக் குறைவாகவே மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனாலும் பாதுகாப்பு மிகப்பலமாக இருந்தது. தற்போது தானுலங்கிகள் மூலம் புகைப்படம், காணொளி எடுப்பது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தானுலங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தவும் அச்சுறுத்தல் உள்ளது. 

இதனால், இந்திய இராணுவத் தளவாட ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள தானுலங்கி செயலழிப்பு கருவி செங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தது அது என்ன? அது என்ன? என்ற பொதுமக்களின் தேடலும் கவனமும் அந்தக் கூட்டத்தில் முதன்மையாக இருந்தது.

இந்தக் கருவி மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் தானுலுங்கிகளின் செயல்பாட்டைக் கண்டறிந்து அதைச் செயலிழக்கச் செய்யும். மேலும் இதில் உள்ள வருடிக்கருவி (லேசர்) 2.5 கிலோ மீட்டர் எல்லைக்குள் பறக்கும் தானுலங்கியை தரையிறக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.