Show all

தற்போது இப்படி மூக்கையும் சேர்த்து கட்டிக் கொண்டு இயங்க வேண்டியதில்லை சீனர்களே! அப்போது நீங்கள் வாயைக் கட்டியிருந்தால்

வாயைக் கட்டினால் நோயைக் கட்டலாம் என்பது ஒரு தமிழ் சொலவடை. சீனாவை மட்டும் குறிவைத்து தாக்கும் நுண்ணுயிரிகளுக்குப் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மையாக சீனர்கள் வாயைக் கட்டாமையைத்தான் காரணமாகத் தெரிவிக்கிறார்கள்.

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் வேகமாக பரவி வரும் கோரோனா நுண்ணுயிரித் தாக்குதலுக்கு சீனர்களின் உணவுப்பழக்கமே முதன்மையான காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் கோரோனா நுண்ணுயிரி பரவி வருகிறது. இந்த கோரோனா நுண்ணுயிரி காரணமாக சீனாவில் 26 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா நுண்ணுயிரி தோன்றியுள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

850 பேர்கள் வரை கோரோனா நுண்ணுயிரி தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோரோனா நுண்ணுயிரிக்கு முன், சீனாவை சார்ஸ் நுண்ணுயிரி தாக்கியது. 

சீனாவிலும் ஜப்பானிலும் எளிதாக நுண்ணுயிரி தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. அங்கு மக்கள் மிக எளிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. சார்ஸ் நுண்ணுயிரியும் கோரோனா நுண்ணுயிரி குடும்பம்தான். இந்த குடும்பத்தில் மொத்தம் 6 நுண்ணுயிரி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கோரோனோ நுண்ணுயிரி குடும்பத்தின் 7 வது நுண்ணுயிரி ஆகும். 

இந்த நிலையில் சீனாவை இப்படி நுண்ணுயிரி அடிக்கடி தாக்குவதற்கு காரணமாக அந்நாட்டு மக்களின் உணவு முறை கூறப்படுகிறது. சீன மக்கள் அதிகமாக கடல் உணவுகளை உண்கிறார்கள். இதில் சில மற்ற நாட்டில் உண்ணப்படுவது கிடையாது. சீனர்கள் இயல்பாக பாம்புகளை கூட உண்கிறார்கள். இதில் பல உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகும். 

இதுதான் அவர்களுக்கு எளிதாக நுண்ணுயிரி தாக்குதல் ஏற்பட காரணம் ஆகும். இந்த கோரோனோ நுண்ணுயிரி விலங்குகள் மூலமும் பரவும் நுண்ணுயிரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.