உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையாக, கொரோனா நுண்ணுயிரி தாக்கிய நோயாளிகளுக்கு அவசர கிகச்சை அளிக்கும் வகைக்காக, பத்து நாட்களில் ஆயிரம் படுக்கைகள் வசதியோடு ஒரு புதிய மருத்துவமனையையே கட்டி முடிக்கவிருக்கிறது சீனா. 10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி தாக்கிய நோயாளிகளுக்கு அவசர கிகச்சை அளிக்கும் வகைக்காக, பத்து நாட்களில் ஆயிரம் படுக்கைகள் வசதியோடு ஒரு புதிய மருத்துவமனையையே கட்டி முடிக்கவிருக்கிறது சீனா. சீனாவில் இதுவரை கொரோனா நுண்ணுயிரிக்கு நாற்பது பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்ப்பட்ட நகரங்களில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அறியப்படும் கூகான் மாநிலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டிமுடிக்க மாநில அரசு முடிவு செய்து அதற்க்கான பணிகளை தெடங்கியுள்ளது. ஆயிரம் படுக்கைகளை கொண்டதாக கட்டப்படும் இந்த மருத்துவமனை 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகிவருகிறது. 20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (03.02.2020) முதல் புதிய மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலநூறு கட்டுமான இயந்திரங்களும் தொழிலாளர்களும் தற்போது இந்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பத்தே நாட்களில் ஒரு பிரமாண்டமான் மருத்துவமனை என்ற சீனாவின் இந்த வேகம் உலகநாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.