Show all

சுழியம் இருப்பு வங்கிக் கணக்கு தற்போது வழங்குகிறது இந்திய மாநில வங்கி! எந்த வங்கியிலும் கணக்கு இல்லாமல் இருந்தால்

குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத, ‘சுழியம் இருப்பு’ வங்கிக்கணக்கு தொடங்க தற்போது எந்த வங்கியும் வாய்ப்பு தருவதில்லை. இந்திய மாநில வங்கி தற்போது வழங்குகிறது.

17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத, ‘சுழியம் இருப்பு’ வங்கிக்கணக்கு தொடங்க தற்போது எந்த வங்கியும் வாய்ப்பு தருவதில்லை. குறிப்பிட்ட தொகை கட்டாயம் குறைந்தபட்ச இருப்பாக இருக்க வேண்டும். 

இந்த குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய தொதை அளவு வங்கிக்கு வங்கி மாறுபடும். ‘சுழியம் இருப்பு’ கணக்கில் எந்தவித தொகையையும் செலுத்தாமல் பொதுமக்கள் கணக்கு தொடங்கலாம். அதே போல் கணக்கில் குறைந்த இருப்பு வைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. அந்த வாய்ப்பை தற்போது இந்திய மாநில வங்கி வழங்குகிறது.

கணக்கு தொடங்க 1. அடிப்படை ஆதாரங்கள் போதுமானது. 
2. தனியாகவும், இரண்டு பேர் சேர்ந்து கணக்கு தொடங்கும் வசதியும் உள்ளது. இதில் சுழியம் இருப்பு இருந்தாலே போதும். 3. ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் ஆண்டுக்கு 3.25 விழுக்காடு வட்டி. ஆனால் இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட மாட்டாது.
4. அடிப்படை விதிமுறை மற்ற எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கை வைத்திருக்கக் கூடாது.
5. மாதம் நான்கு முறை பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த 4 முறையில் இயந்திரத்தில் பணம் எடுப்பதும் அடங்கும். ஆதாய அட்டை வழங்கப்படும். இந்தக் கணக்கை இயங்கலையிலும் தொடங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.