மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று வேட்பு மனு பதிகை நடை பெற்றது. அதில் ஐயப்பாட்டில் இருந்த வைகோவின் மனு ஏற்கப் பட்டது. அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக ஆதரவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு பதிகை செய்துள்ளார். சுயேச்சைகள் 4 பேர் மனு பதிகை செய்துள்ளனர். தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரின் மனு ஏற்கப்படுமா? இல்லையா? என்று எதிர்பார்க்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது. இதனை அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தி உள்ளார். வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக போட்டியிட மனு பதிகை செய்துள்ள என்.ஆர். இளங்கோ நாளை தனது வேட்பு மனுவை திரும்பப் பெறுவார் என்று கூறப்படுகிறது. வைகோ, சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ, அன்புமணி, சந்திரசேகரன், முகமத்ஜான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,208.
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட நான்கு சுயேட்;சைகள் உட்பட மொத்தம் 11 பேர் வேட்பு மனு பதிகை செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு பதிகை செய்துள்ளார்.
மேலும் திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு பதிகை செய்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.