தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று விடுதலையானார். 14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று விடுதலையானார். இன்று அவர் விடுதலையாவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு கடந்த கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணத்தை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரில் சென்று வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சிறை கைதி என்ற அடிப்படையில் சசிகலாவுக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அதே சமயம், அவரது தரப்பு வழக்குரைஞர்களின் கோரிக்கையின்படி, சசிகலாவுக்கு தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 10 நாட்கள் கொண்ட சிகிச்சை காலம் முடிவுக்கு வர உள்ளதால், அவர் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.