Show all

சிறிதிவ்யா தற்போது மலையாளத்தில்!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சிறிதிவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார்.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனோடு கதைத்தலைவியாக நடித்தவர் சிறிதிவ்யா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு கொண்டாடிகள் நடுவே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது என அடுத்தடுத்து படங்களில் வேலையாக நடித்து வந்த அவர், கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார். 

கடந்த 3 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த சிறிதிவ்யா தற்போது, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு கதைத்தலைவியாக மழை பிடிக்காத மனிதர் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு கதைத்தலைவியாக நடித்து வருகிறார்.

இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சிறிதிவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிரித்விராஜ் கதைத்தலைவனாக நடித்துள்ள ‘ஜன கண மண’ படத்தில் நடிகை சிறிதிவ்யாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பரக் காணொளி தற்போது இணையத்தில் அதிகம் விரும்பப்பட்டு தீயாகி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.