27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாக்கு விழுக்காட்டை பாதிக்கும் என அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை (18.04.2019) பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்பட இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் புதன் கிழமை மகாவீரர் பிறந்த நாள் அரசு விடுமுறை நாளாகும். அதேபோல், தேர்தலுக்கு அடுத்த நாள் வெள்ளிக் கிழமை புனித வெள்ளி வருவதால் அன்றும் அரசு விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பொதுவாக இதுபோன்று தொடர் விடுமுறை வந்தால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தேர்தல் சமயத்திலும் இதுபோன்று தொடர் விடுமுறை 5 நாட்கள் வருவதால், அப்போதும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள அதிகம் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பொதுமக்களின் இந்தப் பயணம் வாக்கு விழுக்காட்டை பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,088.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.