ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒன்றிய இடைநிலைக் கல்விக்கான சான்றிதழ் (ஐசிஎஸ்இ) பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு, அதே காரணங்களுக்காக நீட் தேர்வை ரத்து செய்யவில்லை? இதன் பின்னணியில் ஒன்றிய பாஜக அரசு பின்னும் அரசியல் சதி அம்பலப்படுத்தப் பட்டு வருகிறது. 20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒன்றிய இடைநிலைக் கல்விக்கான சான்றிதழ் (ஐசிஎஸ்இ) பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாணாக்கர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மாநிலப் பாடத்திட்டத்திலும் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. இந்த மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் தேர்வு ரத்து அறிவிப்பை வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக இரு நாட்கள் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பிலும் தேர்வை நடத்தலாமா அல்லது வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏற்கெனவே பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்பட்ட நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வை மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு ரத்து செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டாலும் இதன் பின்னால் வேறு ஒரு அரசியல் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு, ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒன்றிய இடைநிலைக் கல்விக்கான சான்றிதழ் (ஐசிஎஸ்இ) தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்ததே தவிர நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை. மாநிலப் பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்த மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு மருத்துவப் படிப்புக்கு இடமளிக்க வேண்டும், ஒட்டு மொத்த தமிழகத்தின் கோரிக்கையான, நீட் உள்ளிட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியிறுத்தி வருகிறது. இந்த சூழலில் மாநிலப் பாடத்திட்ட தேர்வுகளை ரத்து செய்தால் கட்டாயம் நீட் எழுத வேண்டிய நிலையை உருவாக்குவதாகிவிடும் என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, வைகோ உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப்பாட்டில், தமிழக மாணவர்களில் உரிமை காக்கும் வகைக்கு பாதுகாப்பாக 12 வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்தப் போகிறதா தமிழக அரசு? அல்லது முந்தைய அதிமுக அரசு போலவே பாஜகவின் வஞ்சக வலையில் தமிழக கல்வி உரிமையைக் காவு கொடுக்கப் போகிறதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.