ஒன்றிய பாஜக அரசு வரவு-செலவு திட்டம் குறித்து பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளதாவது: இவர்கள் வெறும் எண்களை மட்டும்தான் அறிவிக்கிறார்கள். 5 ஆண்டு, 10 ஆண்டுகளில் செய்யப் போவதாகவெல்லாமான நினைப்புகளை யெல்லாம் வரவு-செலவு திட்டத்தில் சொல்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசு வரவு-செலவு திட்டத்தில் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி, அதாவது செஸ் பல பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசும், டீசல் மீது 4 ரூபாயும் விதிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா முடக்கத்தில் ஒன்றிய பாஜக அரசு செலவு செய்தவற்கு தயங்கியதன் விளைவு வரி வருவாய் குறைந்து போயுள்ளது. யாரிடம் இருந்து வரி வாங்க வேண்டுமோ அவர்களுக்கு வரியைக் குறைத்துவிட்டு அதற்கு மாற்றாக பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் மீது வரியை உயர்த்துகின்றனர். மேலும் மேலும் வரியை போட்டு இந்த விலையில் வைத்துள்ளனர். அதன்வழியாக நாட்டில் விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த விலைவாசி ஏற்றத்தை குறைக்க அரசு மாற்றுவழி எதையும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம், வருமான இழப்பு உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்கள் குறைக்கவில்லை. ஆனால் பெரிய நிறுவனங்கள்; கட்டவேண்டிய கிட்டதட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரியை அந்தப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய வருமானத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு அதற்கு மாற்றாக பாமர மற்றும் நடுத்;தட்டு மக்களில் 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் பெட்ரோல் போடுபவர்களின் மீது திணிக்கப்படுகிறது. அனைத்திற்கும் இந்த வகை மக்கள் வரி கட்ட வேண்டியிருக்கிறது. கொரோனா முடக்கத்தால் ஏற்பட்ட அரசின் வரிச்சுமையை முழுக்க முழுக்க இந்த வகைமக்கள்தாம் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. உள்கட்டமைப்புக்கு மட்டுமே 5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு என்று சொல்கிறார்கள். அந்த உள்கட்டமைப்பால் யாருக்கு என்ன பண்ண போகிறீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு 63,246 கோடி ஒதுக்கீடு செய்வதாக ஒரு எண்ணை கொடுக்கிறார்கள். அவ்வளவும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுக்கப்போகிறதா? முதல்கட்டமாக நடைபெற்ற பணிக்கே 20 விழுக்காடுதான் கொடுத்தார்கள். அவர்கள் அறிவித்த அறிவிப்பில் வெறும் 2000 கோடிதான் வரும். ஆனால் அறிவிக்கும்போது மட்டும் மிகப்பெரிய அளவில் அறிவிக்கிறார்கள். இவர்கள் வெறும் எண்களை மட்டும்தான் அறிவிக்கிறார்கள். 5 ஆண்டு, 10 ஆண்டுகளில் செய்யப் போவதாகவெல்லாமான நினைப்புகளை யெல்லாம் வரவு-செலவு திட்டத்தில் சொல்கிறார்கள். இதைவிடுத்து இந்த ஆண்டு இவ்வளவு வருமானம் வருகிறது. நாங்கள் இதையெல்லாம் செய்யப்போகிறோம் என சொல்ல வேண்டும். அப்போதுதான் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும். இந்தியாவின் வரி ஜிடிபி 9 விழுக்காடு தான் இருக்கிறது. குறைந்துகொண்டே செல்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா கடைசியில் இருந்து 4 வது இடத்தில் உள்ளது. எந்த நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு இவ்வளவு வரி போட்டு வைத்திருக்கிறார்கள், என்று ஒன்றிய பாஜக அரசு வரவு-செலவு திட்டம் குறித்து பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
20,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய அரசின் சுமையை பாமர மற்றும் நடுத்தட்டு மக்கள்தாம் சுமக்கிறார்கள் என ஒன்றிய பாஜக அரசு வரவு-செலவு திட்டம் குறித்து பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.