Show all

துறந்தார் மோடி! தனக்குத்தானே சூட்டிக் கொண்ட சவுக்கிதார் அடைமொழியை

நாட்டின் சௌக்கிதார் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட மோடி, கீச்சுப் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த சவுக்கிதார் என்ற அடைமொழியை இன்று நீக்கினார்.

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேர்தல் கருத்துப் பரப்புதல் முயற்சியாக மோடி தன்னை நாட்டின் சௌக்கிதார் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட மோடி கீச்சுப் பக்கத்தில் தனது பெயருடன் சவுக்கிதார் என்ற அடைமொழியை இணைத்திருந்தார். 

அவரை தொடர்ந்து நடுவண் அமைச்சர்கள் பாஜக ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக பஉக்கள், சமஉக்களும் தங்களது பெயர்களுக்கு முன்னால் 'சவுக்கிதார்' என்ற அடைமொழியை இணைத்திருந்தனர். 

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இரண்டாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. 

இந்நிலையில், கீச்சுப் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த சவுக்கிதார் என்ற அடைமொழியை இன்று நீக்கினார். 

இதுதொடர்பாக, அவர் இன்று மாலை தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரு பதிவுகளில் 'சாதியவாதம், மதவாதம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி போன்ற தீமைகளுக்கு எதிராக இந்த நாட்டை பாதுகாக்கும் சக்திவாய்ந்த அடையாளமாக சவுக்கிதார் என்னும் சொல் உருவாகி விட்டது. 

தற்போது சவுக்கிதார் என்னும் சொல்லின் உத்வேகத்தை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்லும் நேரம்  வந்து விட்டது. இந்த உத்வேகத்தை எல்லா வேளைகளிலும் உயிர்ப்புடன் வைத்திருந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டியுள்ளது. 

எனது கீச்சுப் பக்கத்தில் இருந்து சவுக்கிதார் என்னும் சொல் விடைபெற்று என்னுள் உறைந்திட்ட ஒரு பகுதியாகிறது. நீங்களும் அவ்வாறே சவுக்கிதாரை உங்களுக்கு உறைய விட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,161.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.