Show all

காஷ்மீரில் பாதுகாப்பு படை குவிப்பு ஏன்? ஆளுநர் தெரிவிப்பது என்ன? 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைப்பு.

காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் முன்பே அனுப்பி வைத்திருந்தது. இந்த நிலையில், காஷ்மீர் பாதுகாப்பு பணிக்காக மேலும் கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று காலை முதல் வீரர்கள்  வரத்தொடங்கியுள்ளனர்.

17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீரில் குவிக்கப்படுகிறது பாதுகாப்பு படை. கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுகளான 35 ஏ 370 ஆகியவற்றை நீக்க நடுவண் அரசு முடிவு செய்து இருப்பதால்தான் ராணுவத்தை குவிப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. ஆனால், இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தியாவில் அடுத்த பதின்மூன்றாவது நாளில் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்  நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. 

இதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. இந்த நிலையில், காஷ்மீர் பாதுகாப்பு பணிக்காக மேலும் கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று காலை   முதல் வீரர்கள்  வரத்தொடங்கியுள்ளனர். 

ஸ்ரீநகரின் முதன்மையான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளைப் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால் சிறிநகரில்  அசாதாரண சூழல் நிலவுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,232.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.