Show all

பாஜக அரசின் கார்ப்பரேட் பாசத்திற்கு அறமோ, எல்லையோ கிடையாதா! அமைச்சருக்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கேள்வி

தரம், திறன் நிரூபிக்கப்படாத கொரோனில் மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? ஒன்றிய அமைச்சர் ஹர்ச வர்தனுக்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு சரமாரி கேள்வி

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரு நாட்டின் நலங்குத்துறை அமைச்சர் இயல்அறிவுப்பாடாக நிரூபிக்கப் படாத ஒரு மருந்தை கோவிட்19-க்கு எதிரான துணைச் சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்? இட்டுக்கட்டப்பட்ட ஒரு மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? தரம், திறன் நிரூபிக்கப்படாத கொரோனில் மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? என்பதாக ஒன்றிய அமைச்சர் ஹர்ச வர்தனுக்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு  சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

கொரொனா நுண்நச்சுக்கு எதிரான சிகிச்சையில் துணைமருந்தாகப் பயன்படுத்த, பாபா ராம்தேவின் பதஞ்சலி மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில்

பாபா ராம்தேவின் பதஞ்சலி மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கொரோனில் மருந்தை ஏன் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஒன்றிய நலங்குத்துறை அமைச்சர் ஹர்ச வர்தன் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் ஜெயலால் கூறும்போது, “ஒரு நாட்டின் நலங்குத்;துறை அமைச்சர் இயல்அறிவுப்பாடாக (சயின்;டிபிக்கலி) நிரூபிக்கப் படாத ஒரு மருந்தை கோவிட்19-க்கு எதிரான துணைச் சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்? இட்டுக்கட்டப்பட்ட ஒரு மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? ஒரு பொருள் நேர்மையானதா, நல்லதா என்று இயல்அறிவுப்பாடாக (சயின்;டிபிக்கலி) நிரூபிக்கப் படாத போது அதை பயன்படுத்த அனுமதியளிப்பது அறம்தானா? ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தரம் நிரூபிக்கப்படாத மருந்தை சந்தை லாபம் என்ற பெயரில் நாம் ஆயுர்வேதத்தில் கலப்படம் செய்ய வேண்டாம்” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்திய மருத்துவக் கழகத்தின்  நடத்தை விதிமுறைகளை பட்டவர்த்தனமாக மீறும் செயல் குறித்து இந்திய மருத்துவக் கழகத்திடம் புகார் எழுப்பவுள்ளதாக இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு  அறிக்கையில் தெளிவு படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவக்கழகத்தின் நடத்தை விதிகளின் படி எந்த ஒரு மருத்துவரும் என்னென்ன மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன என்ற துல்லிய விவரம் இல்லாத எந்த ஒரு மருந்தையும் பரிந்துரை செய்யக் கூடாது. கடந்த கிழமை யோகா குரு பாபா ராம்தேவ், நலங்குத்துறை அமைச்சர் ஹர்ச வர்தன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் முன்னிலையில் கரோனில் மருந்தை அறிமுகம் செய்தது.

ஆயுஷ் அமைச்சகம் இதற்கு அனுமதியளித்துள்ளது, அதுவும் உலகச் நலங்கு அமைப்பின் சான்றிதழ் முறைகளின்படி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஆனால் உலக நலங்கு அமைப்பு பதஞ்சலியின் இந்த மருந்தின் தரம், திறன் பற்றி தாங்கள் எதுவும் சோதிக்கவில்லை என்று கீச்சுவில் மறுத்துள்ளது. அதாவது, “கோவிட் 19- காய்ச்சலுக்கு உலக நலங்கு அமைப்பு எந்த ஒரு மரபான மருந்தின் தரத்தையோ திறனையோ, சோதித்து சான்றிதழ் அளிக்கவில்லை” என்று தன் கீச்சுப் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே கரோனில் என்ற மருந்துக்கு சிகிச்சைச்  சோதனைகள் நடத்தப்பட்டிருந்தால் அதன் விவரங்களை கேட்டுள்ளது இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.