நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்பார். மேற்கு வங்கத்தில் நடந்த 2 கட்டத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா திட்டவட்டமாகத் தெரிவிப்பது எப்படி என்று மக்கள் ஐயம் எழுப்புகின்றனர். 21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்பார். மேற்கு வங்கத்தில் நடந்த 2 கட்டத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எப்படி கட்டம் கட்டமாக வெற்றியை இப்படி இவர்களால் உறுதி செய்ய முடியும்? வாக்கு எந்திரத்தில் மாற்றம் செய்ய அதிகாரிகளைத் தயார் செய்து விட்டார்களா என்று மக்கள் ஐயம் எழுப்புகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் இரு கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 3-வது கட்டத் தேர்தல் 31 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்கான கருத்துப்பரப்புதலில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் மக்களுக்குத் தங்கள் செய்துள்ள நன்மைகளை பட்டியல் இட ஏதும் இல்லாத நிலையில், தமிழக விளம்பரங்களில் பொய்களை அள்ளிவிடுவது போலவாவது பொய்களையும் அள்ளி விடாமல் இரண்டு கட்டத் தேர்தலில் தங்களுக்கு வெற்றி உறுதி என்று அறிவிப்பு வெளியிடுவது மக்களுக்கு அச்சத்தை ஊட்டுவதாக அமைந்துள்ளது. எப்படி கட்டம் கட்டமாக வெற்றியை இப்படி இவர்களால் உறுதி செய்ய முடியும்? வாக்கு எந்திரத்தில் மாற்றம் செய்ய அதிகாரிகளைத் தயார் செய்து விட்டார்களா என்று மக்கள் ஐயம் எழுப்புகின்றனர். நந்திகிராம் தொகுதியில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவால் ஈர்த்துக் கொள்ளப்பட்ட சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இந்நிலையில், கூச்பெகர் மாவட்டத்தில் உள்ள சித்தால்குச்சி நகரில் பாஜக மூத்த தலைவர் அமித்சா இன்று தேர்தல் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதி எல்லையில், எல்லை தாண்டி சட்டவிரோதமாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இதை திரிணமூல் அரசு ஒருபோதும் தடுத்து நிறுத்தாது. எங்களால் மட்டுமே முடியும். இந்தத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதுவரை நடந்த முதல் இரு கட்டத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைவார். இவ்வாறு அமித்சா தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.