Show all

பரபரப்பு நிமிடங்களில் டெல்லி! 62 நாட்களாகத் தொடரும் உழவர்கள் போராட்டம், இன்று டிராக்டர் பேரணி

தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, டெல்லியில் குடியரசு நாள் கொண்டாடும் விழாப் பாதையை சுற்றி 14 கி.மீ. தூரத்திற்கு உழவர்கள் பேரணி நடத்த தடை விதித்துள்ளது. 

13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி டெல்லியில் 62 ஆவது நாளாக உழவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போரட்டத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு, டெல்லியில் குடியரசு நாள் கொண்டாடும் விழாப் பாதையை சுற்றி 14 கி.மீ. தூரத்திற்கு உழவர்கள் பேரணி நடத்த தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில், காவல்துறை டிராக்டர் பேரணிக்கு அனுமதித்த வகைக்கு வேளாண் சங்கங்கள் டிராக்டர் பேரணியின் பயணப் பாதையைத் தெளிவாகத் திட்டமிட்டு இருந்தாக தெரியவருகிறது. ஆனால் எதிர்பாராத போக்குவரத்து நெருக்கடியைக் காரணமாகக் காட்டி அனுமதிக்கப்பட்ட பாதைக்கு மாற்றாக வேறு சில பாதைகளில் பேரணி செல்ல காவல்துறையினர் உழவர்களை வலியுறுத்தினர். 

இப்படி ஆங்காங்கே காவலுக்கு உள்ள காவலர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பாயணப்பாதையை மாற்ற முயல்வது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. இதனால் காவலர்களுடன் பேரணி உழவர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் காவல்துறையினர் வாகனங்களை உழவர்கள் முற்றுகை இட்டனர். உழவர்களைக் கலைக்க, உழவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உழவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளார்கள். பகரமாக சில உழவர்கள் காவல்துறையினரைத் தாக்கிய கோபமும், பல உழவர்கள் காவல்துறையினரை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய மனிதநேயமும் காணெளிக் காட்சிகளாக இணையத்தில் தீயாகி வருகின்றன.

இதனால் அங்கு பதற்றமான சூழல் எழுந்தது. ஏற்கெனவே ஒரு ஆர்ப்பாட்டம் உழவர்கள் சார்பில் நடத்தப்பட்ட போது கூட மிகவும் அழகாக பகுதி பகுதியாக போராட்டக் களங்களில் அமைதியாக நடத்திய நிலையில் தற்போது மட்டும் தடியடி, தள்ளுமுள்ளு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து உழவர்கள் கூறுகையில் இந்தப் பேரணியில் அமைதியாக எந்த கலவரமும் நடைபெறாது என்றுதான் நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் காவலர்கள்தாம் எங்கள் மீது தடியடி நடத்தினார். பேரணியின் முற்பகுதியில் செல்லும் இளைஞர்கள் மீது காவல்துiயினரால் திடீரென்று தடியடி நடத்தப்பட்டதே  பேரணியின்; போக்கில் நிகழும் அமைதியின்மைக்கு காரணம் ஆகும்.

நாங்கள் பின்னாடி வந்து கொண்டிருக்கிறோம். பேரணியில் 30 அணிகள் உள்ளன. இந்த 30 அணிகளும் அமைதியாகத்தாம் வந்து கொண்டிருக்கின்றன. முன்னாடி போன வேறு ஒரு அணியில் இளைஞர்கள் அதிகம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இது அரசின் சாலை, இந்தியா சுதந்திர நாடு. இன்று குடியரசுநாள். டெல்லி எங்கள் தலைநகரம், அமைதியான எங்கள் கோரிக்கை போரணியை ஏன் தடுக்கிறீர்கள் என்கிறார்கள். இதை அரசும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசவே இளைஞர்கள் பகரமாகத் தாக்குதல் நடத்தியிருக்கலாம். அரசாங்கத்தால் ஏதாவது விபரீதம் முன்னெடுக்கப்பட்டால், இளைஞர் உழவர்களை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று உழவர்கள் தெரிவித்தனர்.

அண்மைச் செய்தியாக, டெல்லிக்குள் டிராக்டரில் வந்த உழவர்கள் தற்போது செங்கோட்டையை அடைந்துள்ளனர். செங்கோட்டை கொத்தளத்தில் ஏறி மூவர்ணக் கொடிகளையும், வேளாண் சங்கங்களின் கொடியையும் ஏற்றியுள்ளனர்.

நாட்டின் 72வது குடியரசு நாள் விழா நடைபெறும் இன்று இப்படி ஒரு போராட்டமும், செங்கோட்டை முற்றுகையும், இந்தியா மீதான கவனத்தை குவிக்கிறது. விடுதலை நாளன்று மூவர்ண இந்தியக்கொடி ஏற்றப்படும் செங்கோட்டை கொத்தளத்தில் நுழைந்துள்ளனனர் உழவர்கள். 62 நாட்களாக தொடரும் உழவர்களின் போராட்டம் தற்போது வேறொரு கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. பரபரப்பு நிமிடங்களில் டெல்லி இருந்து கொண்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.