ராகுலே தலைமைஅமைச்சர் வேட்பாளர் என்று ஸ்டாலின் மட்டுமே முன்மொழிந்தார்! காங்கிரஸ்காரர்களில் ஒற்றை நபர் கூட அதை அங்கீகரிக்காதது மிகப் பெரிய வரலாற்றுச் சோகம் ஆகும். நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசின் ஒட்டு மொத்த வெற்றியும் காங்கிரஸ் தலைவர்களில் ராகுல் ஒருவரை மட்டுமே சாரும். ஒற்றை மனித இராணுவமாக மனிதர் எவ்வளவு அழகாக சுழன்றடித்தார் மோடியை! பிரியங்காவின் கோபம் மிகமிகச் சரியே என்பது பொதுமக்கள் அங்கீகரிக்கும் கருத்தே ஆகும். இந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி, 'கடந்த தேர்தலில் துணைத் தலைவராக இருந்தேன். அப்போது தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி தலைவர் பதவி பொறுப்பை விலக்கிக் கொண்டார். அதன் பிறகு என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அதேபோன்று இன்று ஏற்பட்ட தோல்விக்கு நானே முழுக்க பொறுப்பேற்றுக்கொள்கிறேன். இந்த தோல்விக்கான காரணத்தை நாம் முழுமையாக ஆய்வுப்படுத்த வேண்டும்' என்று கூறியதுடன், தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதவி விலகல் கடிதத்தை கூட்டத்தில் அளித்துள்ளார். அப்போது மன்மோகன் சிங் உள்ளிட்ட, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும், விலகல் கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேசினர். அப்போது பிரியங்கா குறுக்கிட்டு ஆவேசமாக பேசினார். மோடிக்கு எதிராக என் சகோதரரை தனியாக போராட விட்டுவிட்டு, ஒதுங்கிக்கொண்டீர்கள். நீங்கள் எல்லாம் அப்போது எங்கே இருந்தீர்கள்? மோடிக்கு எதிராக ரபேல் விவகாரத்தையும், மோடியின் காவலாளி என்ற முழக்கத்துக்கு எதிராக என் சகோதரர் பேசி போராடிய போதும், அவரை யாரும் ஆதரிக்க முன்வரவில்லை. காங்கிரசின் தோல்விக்கு காரணமான அனைவரும் இந்த அறையில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்து குற்றம் சாட்டிய பிரியங்கா- ராகுல் பதவி விலகுவது பா.ஜனதாவின் வலையில் விழுந்ததுபோல் ஆகிவிடும் என்று கூறி, பதவிவிலக வேண்டாம் என்று ராகுலிடம் வலியுறுத்தினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,165.
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி ஆராயும் நோக்கத்திற்காக நடைபெற்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



