புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழித் தேர்வாக உள்ள அந்நிய நாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது. 18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய கல்வி கொள்கையெல்லாம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். நீங்கள் புதிய கல்விக் கொள்கையில் இந்தியா அடையப் போவதாக சொல்லியிருக்கிற இலக்குகளைத் தமிழகத்தில் சிறப்பாகவே கட்டுமானம் செய்திருக்கின்றன, தமிழகத்தை ஆண்ட திராவிடக்கட்சிகள். சத்துணவு கொடுக்கிறேன் என்று எம்ஜியார் அவர்கள் சொல்லி, கல்வி கற்க உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள் என்று கேட்டால், நான் ஒரு முட்டையும் சேர்த்துக் கொடுக்கிறேன் என்று குழந்தைகளைக் கல்விக்கு அழைப்பார் கருணாநிதிஅவர்கள். ஒட்டுமொத்த இந்தியாவில் சோறு போட்டு கல்வி கொடுத்த மாநிலம் எதுவும் கிடையாது; இனியும் முடியாது; எக்காலத்தும் முடியவே முடியாது என்பதுதான் உண்மை. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர எதிரியும் கிடையாது என்பதுதாம் தமிழக அரசியல். தேவையெழுகின்றவர்கள் ஹிந்தியை மட்டுல்ல உலகத்தின் எந்த மொழியையும் படிப்போம். திணித்தால் எங்கள் தாய்மொழியான தமிழைக் கூட எதிர்ப்போம் என்பவர்கள்தாம் தமிழர்கள். நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான தேவை எங்களுக்கு இல்லவேயில்லை. ஆனால் ஓராண்டுக்குள் அதில் நீங்கள் முன்னெடுத்திருக்கிற மாற்றத்தை கொண்டு உங்கள் நோக்கத்தைத் தெளிவு படுத்த இங்கே நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழித் தேர்வாக உள்ள அந்நிய நாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது. இதுதான் கடந்த ஓராண்டில் நடுவண் பாஜக அரசு முன்னேடுத்த நாங்கள் சுட்டிக்காட்ட விளைகின்ற செய்தி. சீனாவில் அட்சி மாறினாலும் சரி, இந்தியாவின் நடுவண் அரசில் ஆட்சி மாறினாலும் சரி, சீனாவோடு இந்தியாவின் நட்பு அல்லது பகை நிலைப்பாடு மாறும். அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர எதிரியும் கிடையாது என்கிற நிலைப்பாடு தமிழக அரசியலுக்கு எப்படி கிடைக்கிறது என்கிற ஒப்பாய்வு தான் இது. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்று கல்வி கற்பிப்பது தமிழகம். இன்றைய தலைவர்களின் இனத்தைச் சார்ந்தவனே என்றைக்கும் தலைவன், என்று இனஅடிப்படையைக் கொண்டிருக்கிற பாஜகவுக்கு அடுத்த தலைமுறைக்கான கல்வியைத் தருவதற்கு அணுவளவு தகுதியும் கிடையவே கிடையாது. புதிய கல்விக் கொள்கை இந்தியாவிற்கே ஆபத்தானது. அதில் நிறைய சூழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.