Show all

‘ஒரேநாடு ஒரே கொரோனாஎதிர்ப்பு! டிரம்பின் வாதத்தை முறியடிக்க- முன்னெடுக்கலாமே நடுவண் பாஜக அரசு

அமெரிக்காவில் ஆறுகோடி பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஆறில் ஒரு பங்கு பேர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். 

18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் ஆறுகோடி பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா போல நான்கு மடங்கு மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியாவில், ஒருகோடியே பத்து இலட்சம் பேர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். 

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக பரிசோதனைகள் செய்வதால்தான் தொற்று எண்ணிக்கை அதிகம் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவிக்கிறார். 

இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இந்தியாவுடன் ஒப்பிட்டு ட்ரம்ப் பேசியுள்ளார். அமெரிக்காவில் சுமார் ஆறுகோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் இந்தியாவில் ஒருகோடியே பத்து இலட்சம் மக்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கிட்டத்தட்ட 6 மடங்கு கூடுதலான பரிசோதனைகளை மேற்கொண்டதாக ஒப்பிட்டுள்ளார். 

ஒரேநாடு ஒரே….. என்று பீற்றிக் கொள்ளும் நடுவண் பாஜக அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லா நிலையிலும், கொரோனாவிற்கு எதிராக கடும்பாடாற்றிக் கொண்டிருக்கும் இந்தியா மாநிலங்களிடமிருந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் திரட்டிய அனைத்து மாநிலங்களும் சேர்ந்த தரவுகள்படி, 1,81,90,382 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, அமெரிக்காவில் நாளொன்றுக்கு 8,10,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை விட 4 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் குறைவான பரிசோதனையே நடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரேநாடு ஒரேவரி, ஒரோ நாடு ஒரே கல்விமுறை, ஒரேநாடு ஒரே இயற்கை சீரழிப்பு, ஒரேநாடு ஒரே ரேசன்கார்டு, என்று மக்களைச் சுரண்டுவதில் தேசிய அடையாளத்தை முன்னெடுக்கும் நடுவண் பாஜக அரசு- உண்மையான தேசியம் காக்கும் அரசாக ஒரேநாடு ஒரே கொரோனாஎதிர்ப்பு என்று அனைத்து நடுவண் அரசு அதிகாரிகளையும் களம் இறக்கலாமே. முதன்மையாக அந்த நீட் தேர்வை துறை சார்ந்த அதிகாரிகளை களம் இறக்கி அவர்களை மேலும் தகுதிப்படுத்தலாமே நடுவண் பாஜக அரசு. 

கொரோனா எதிர்ப்பில் மட்டும் அனைத்து பொறுப்புகளையும் மாநிலங்களுக்கு உதறி விட்டு, கொரோனா பாதிப்பு, பாதிப்பில் இறப்பு என்கிற தரவுகளை பட்டியல் இடுகிற வேலைகளை மட்டும் பார்க்கிற நடுவண் அரசு அதிகாரிகள் ‘ஒரேநாடு ஒரே கொரோனாஎதிர்ப்பு’ என்று களமிறங்கினால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாக்கின் மீது பல்லைப் போட்டு இப்படியெல்லாம் விமரிசிக்க முடியுமா?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.