Show all

ஆதிக்க சமுதாயத்தின் அதிகாரத்திற்கான கட்சி பாஜக! கணவர்களை காக்க தனி ஆணையம் கேட்கும் பாஜக பாஉக்கள்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சட்டங்களைத் தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். 

இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரிநாராயன் ராஜ்பர் பேசுகையில், 'மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் அறங்கூற்றுமன்றங்களில் உள்ளன. பெண்களுக்கு நியாயம் கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான அன்சுயல் வர்மா கூறுகையில், 'இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளேன். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-யில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. 

கணவன் மற்றும் அவருடைய உறவினர்களால் பெண்கள் வரதட்சணை போன்ற கொடுமைப்படுத்தப் படுதல் இப்பிரிவில் அடங்குகிறது. இந்த சட்டப்பிரிவு ஆண்களை குறிவைத்துத் தவறாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், இதுபோன்ற விவகாராங்களில் தவறாக 27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்' என தெரிவித்துள்ளார். 

பாஜக என்றாலே ஆதிக்க சமுதாய அதிகாரத்திற்கான கட்சி என்பதன் வெளிப்பாடே இது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,899.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.