உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, கோல்கட்டா உயர் அறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, கர்ணன், வேட்பு மனு பதிகை செய்துள்ளார். 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக பதவி வகித்த போதே, அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர், கர்ணன். கடந்த ஆண்டு, 'ஊழலுக்கு எதிரான கட்சி' என்ற, புதிய கட்சியை தொடங்கினார். அரசு நிர்வாகத்திலும், அறங்கூற்றுத்துறையிலும் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தன் நோக்கம் என, அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே, நடு சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், வேட்பு மனு பதிகை செய்துள்ள அறங்கூற்றுவர் கர்ணன், தற்போது, வாரணாசி தொகுதியிலும் வேட்பு மனு பதிகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



