திட்டமிடாத ஊரடங்கு பாதிப்பு காலத்தில் மாதக்கணக்கில் கட்டணஏற்றம் செய்யாத வாடிக்கையாளரை கவர ஏர்டெல் முன்னெடுக்கும் இலவச தரவு முயற்சி 28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திட்டமிடாத ஊரடங்கு பாதிப்பு காலத்தில் மாதக்கணக்கில் கட்டணஏற்றம் செய்யாத வாடிக்கையாளர்களில்- தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 1 ஜிபி அளவிலான இலவச தரவை வழங்குகிறது. இந்த புதிய சோதனை குறித்து தகுதியான பயனர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் ஒரு சேதியை அனுப்புகிறது. மூன்று நாட்களுக்கு இலவசமாக உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளுடன் பயனர் 1 ஜிபி அளவிலான அதிவேக தரவையும் பெறுவர் என்பதே அந்தச் சேதி ஆகும். மேலும் அந்தச் சேதி, முன்னதாக கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளரை தொடர்ந்து ஏர்டெல் நன்மைகளைப் பெற வரம்பற்ற சிப்பம் மூலம் கணக்கை கட்டணஏற்றம் செய்யும்படியும் கேட்கிறது. பொதுவாக குறிப்பிட்ட ஏர்டெல் எண் ஒரு மாதத்திற்கும் மேலாக கட்டணஏற்றம் செய்யப்படவில்லை என்றால் மட்டுமே இம்மாதிரி கேட்கும். கடந்த மாதமும், ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு இலவசமாக 1 ஜிபி அளவிலான தரவை வழங்கியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.