உள்துறை அமைச்சர் அமித்சா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசின் உள்துறை அமைச்சரான அமித்சாவிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமித்சா முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது டெல்லி அனைத்திந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.