கர்நாடகாவில் 15,ஆவணி திங்கட் கிழமைக்குள் (ஆகஸ்ட் இறுதிக்குள்) புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று துணை முதல்வர் அஷ்வத் நாராயணா உறுதி அளித்துள்ளார். 18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கிருஷ்ணசுவாமி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கைக்கு நடுவண் அமைச்சரவை கடந்த புதன் கிழமை ஒப்புதல் அளித்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஷ்வத் நாராயணா, தொடக்க மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் ஆகியோர் இந்த வரைவுக்குழுவின் தலைவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கனுடன் காணொளி மூலம் நேற்று உரையாடினர். அப்போது, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்த வரைவு குழுவை எடியூரப்பா பாராட்டினார். இந்தக் கூட்டத்துக்கு பின் துணை முதல்வர் அஷ்வத் நாராயணா கூறியதாவது: அமைச்சர் சுரேஷ் குமார்கூறுகையில், முதலில் கர்நாடகஅரசு உருவாக்கியுள்ள கல்விகொள்கையையும், நடுவண் அரசின்புதிய கல்வி கொள்கையையும் ஒப்பிட்டு ஆராய இருக்கிறோம். இரண்டு கிழமைகளுக்குள் இரண்டு கொள்கைகளும் இணைக்கப்படும். அதன்பின்னர், கர்நாடக மாநிலத்துக்கான தனிக் கல்வி கொள்கை உருவாக்கப்படும், என்றார்.
கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்தக் கொள்கையை வடிவமைத்துள்ளனர். இதனை செயல்படுத்துவதற்காக, ‘புதிய கல்விக் கொள்கைபணிக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விடுதலை நாளுக்கு அடுத்த நாள் முதல் கட்ட திட்ட வரைவுஅறிக்கையை தாக்கல் செய்யும். 15,ஆவணி திங்கட் கிழமைக்குள் (ஆகஸ்ட் இறுதிக்குள்) கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அஷ்வத் நாராயாணா தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.