Show all

k.பாலசந்தர் பவுண்டேசன் தொடங்கப்பட்டது

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளையொட்டி, அவரது பெயரிலான அறக்கட்டளையை கவிஞர் வைரமுத்து சென்னையில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை காலை முதல் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாலசந்தர் கடைசியாக நடித்த "உத்தமவில்லன்' படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து "பாலசந்தரின் கலை ஆளுமை' குறித்த கலந்துரையாடல், விவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதையடுத்து மாலையில் நடைபெற்ற விழாவில் பாலசந்தர் பெயரிலான அறக்கட்டளையை கவிஞர் வைரமுத்து தொடக்கி வைத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.