Show all

மக்களிடம் செல்வாக்கு பெறுமா ஆர்எஸ்எஸ்!

தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கேட்ட விண்ணப்பத்தை நிராகரித்ததால் உள்துறைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர், திருவள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் அனைவருக்கும் 'அறங்கூற்றுமன்ற இகழ்ச்சி' கவனஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அனுமதி கேட்ட விண்ணப்பத்தை காவல்துறை ஆய்வாளர் நிராகரித்துள்ளார். இதையடுத்து கார்த்திகேயன் சார்பில் உள்துறைச் செயலர் பனீந்தர ரெட்டி காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு திருவள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் பகேர்லா ஆய்வாளர் பத்மஸ்ரீலதா ஆகியோருக்கு வழக்கறிஞர் பிரபு மனோகர் 'அறங்கூற்றுமன்ற இகழ்ச்சி' கவனஅறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு கவனஅறிக்கை அனுப்பி அவர்கள் தரப்பை கேட்ட பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் 'அறங்டுகூற்றுமன்ற உத்தரவு தெரியாது' என நீங்கள் யாரும் கூற முடியாது. உத்தரவு அறங்டுகூற்றுமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

மேலும் நேரிலும் உத்தரவின் நகல் வழங்கப்பட்டது. உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும் அதை மீறும் வகையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்ட விண்ணப்பத்தை நிராகரித்து திருவள்ளூர் நகர காவல்ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார். உயர் அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அனுமதி மறுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. போதிய பாதுகாப்பு வழங்குவது தான் உங்கள் கடமை. காவல்ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதும், அறங்கூற்றுமன்ற இகழ்ச்சியும் ஆகும்.

எனவே உடனடியாக திருவள்ளூர் காவல்ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் அறங்கூற்றுமன்ற இகழ்ச்சி வழக்கு தொடர நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,386.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.