Show all

காவல்துறைக்கு அறங்கூற்றுமன்றம் உத்தரவு! தமிழ்நாட்டில் ஞாயிறன்று ஆர்எஸ்எஸ்சின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு பதிகை செய்ய முடியாது என்றும், திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்தது சென்னை உயர்அறங்கூற்றுமன்றம்.

11,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஞாயிற்றுக் கிழமையன்று, தமிழ்நாடு முழுதும், ஐம்பது இடங்களில், ஆர்.எஸ்.எஸ்சின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க, காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, உயர் அறங்மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் அறங்டகூற்றுமன்ற அறங்கூற்றுவர் இளந்திரையன், இன்று மாலைக்குள் அனுமதி வழங்கும்படி, காவல்துறைக்கு  உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மனு பதிகை செய்தார். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, அறங்கூற்றுவர் இளந்திரையன் முன்பு முறையீடு செய்யப்பட்டது. 

அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டார் அறங்கூற்றுவர். மனுவுக்கு எண் வழங்கும் நடைமுறை முடிந்த பின்னே விசாரிக்க முடியும் எனவும், தேவை என்றால், அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்ற பொறுப்பு தலைமை அறங்கூற்றுவர் தலைமையிலான 2 அறங்கூற்றுவர் அமர்வு கூறுகையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு பதிகை செய்ய முடியாது என்றும்,

திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என உத்தரவு பிறப்பித்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,385.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.