Show all

உங்களுக்கு எழும் ஐயங்களுக்கு விடைகள்! மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்பாட்டில்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்பாட்டில், பலருக்கும் பல்வேறு ஐயங்கள் எழுகிறது. அந்த ஐயங்களுக்கான விடைகளை இந்த செய்தி கொண்டிருக்கும். 

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியதோடு அதற்காக சிறப்பு முகாம்களையும் அமைத்துள்ளது. 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்பாட்டில், பலருக்கும் பல்வேறு ஐயங்கள் எழுகிறது. அந்த ஐயங்களுக்கான விடைகளை இந்த செய்தி கொண்டிருக்கும். 

சிறப்பு முகாம்களில் நுகர்வோர்கள் பலரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இயங்கலையில் ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. 

தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை  இணைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையத்தளத்திற்குள் செல்ல வேண்டும். அந்தப் பக்கத்தில் சென்றவுடன் உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவேண்டும். அதன் பிறகு நமது மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணிற்கு ஒரு ஒருமுறைகடவுச்சொல் வரும் அந்த ஒருமுறைகடவுச்சொல்லைப் பதிவிட்ட பிறகு ஆதார் எண் என்று கேட்கப்பட்டிருக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவிட வெண்டும். 

அடுத்த கட்டத்தில் ஆதார் அட்டையின் நகலை படவடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வளவு தான். உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுந்தகவல் வரும். 

வீட்டு மின் இணைப்பு, வேளாண் மின் இணைப்பு, குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள், விசைத்தறி, கைத்தறி, நுகர்வோர்கள் என மானியம் பெறுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இணைப்பது கட்டாயம் இல்லை. 

பிறகு, நீங்கள்தான் வீட்டின் உரிமையாளரா? அல்லது வாடகைக்கு இருக்கிறீர்களா? மின் இணைப்பு யார் பெயரில் உள்ளது என்ற விவரங்கள் கேட்கும். அதில் உங்களுக்கு பொருத்தமான விவரங்களை அளிக்க வேண்டும். அதன்பிறகு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்ததற்கான ஒரு சேதி தோன்றும். 

வாடகை வீட்டில் இருப்பவர்கள் தங்கள் இருக்கும் வாடகை வீட்டில் உள்ள மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. மின் நுகர்வோர் யார் என்ற விவரத்திற்காக மட்டுமே இந்த விவரம் பெறப்படும். வீட்டின் உரிமையாளர் பெயரில் மட்டுமே மின் இணைப்பு இருக்கும். மின் இணைப்பு எண்ணின் பெயரை வீட்டு உரிமையாளர் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். 

வாடகைக்கு வசித்தவர் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டால், புதிதாக வருபவர்கள் ஆதார் எண் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்டு எத்தனை இணைப்புகள் இருந்தாலும் ஒரே ஆதார் எண்ணை கொடுக்கலாம். இதனால், 100 அலகு இலவச மின்சாரம் போன்ற எந்த மானிய சலுகைகளும் நிறுத்தப்படாது. 

மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது. இறந்தவர்களின் பெயரில் மின் இணைப்பு இருந்தால், மின் இணைப்பு எண்ணை யார் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களது ஆதார் எண்ணை இணைக்கலாம். 

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இயங்கலையில் கட்ட வேண்டும் என்றால் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பதன் மூலம் வேளாண் பெருமக்களுக்கான இலவச மின்சாரத்தில் எந்த பாதிப்பும் கிடையாது. அதுபோக விசைத்தறி, கைத்தறி இணைப்புகளுக்கான இலவச மின்சாரமும் தொடரும் என்று தெரியவருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,447.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.